Kumarapalayam

MLA Mr. P. Thangamani

 

 

MLA Mr. P. Thangamani

 

 

MLA Mr. P. Thangamani

 

 

Father Name PERUMAL
Party AIADMK
Date of Birth 25th – August – 1960
Place of Birth Govindampalayam
Marital Status Married; Two Children
Education B.A.
Political Career President, Pallipalayam Union in 2001.
Member, Tamil Nadu Legislative Assembly, 2006-2011.
Address Chennai: ‘Manoranjitham’, N.B. 24, P.S. Kumarasamy Raja Salai, Chennai-600 028.
Mofussil: No.54, Govindampalayam, Aalampalayam Post, Pallipalayam, Namakkal District-638 006.
Telephone Chennai–Residence:   044-24938600
Office:   044-25670203; Secretariat Intercom: 5945
Mobile +91-9842740514; 9344044629
E-mail mlakumarapalayam@tn.gov.in

Kumarapalayam (State Assembly Constituency)

Kumarapalayam is a State Assembly Constituency in Namakkal District of Tamil Nadu. It covers the majority of Pallipalayam Municipality & Komarapalayam Municipality. It is newly formed by separating Sankari & Tiruchengode constituencies, in the year of 2008. It is included in the Erode Parliamentary Constituency. It covers till Bhavani constituency in the North & Erode East with the river Kaveri as its Boundary.

Total Voters:

Male: 1,15,517
Female: 1,16,875
Total: 2,32,414

 

அதிமுகவின் தேர்தல் அறிக்கை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும்

மே 08,2016,

தமிழகத்தில் விவசாயிகளுக்கு அனைத்துக் கடன்களும் தள்ளுபடி உள்ளிட்ட அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்புகள் அனைத்தும் மக்களுக்கு பயனளிக்கும்படி உள்ளன என தமிழக தொழில், போக்குவரத்துத் துறை அமைச்சரும், குமாரபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளருமான பி.தங்கமணி தெரிவித்தார்.

குமாரபாளையம் தொகுதியில் படைவீடு பேரூராட்சி மற்றும் கிராமப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியது:

தமிழக முதல்வர் ஜெயலலிதா பெருந்துறையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. விவசாயிகளுக்கு அனைத்துக் கடன்களும் தள்ளுபடி, அரசு கேபிள் டிவி பயன்படுத்துவோருக்கு இலவச செட்டாப் பாக்ஸ், இலவச மொபைல் ஃபோன், விவசாயிகளுக்கு முழு வட்டி மானியம், மீனவர்கள் நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரம், உள்நாட்டின் மீன் உற்பத்திக்கு முக்கியத்துவம், மின்பதன பூங்கா அமைப்பு உள்ளிட்ட திட்டங்கள் உள்ளன.

ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு தாலிக்குத் தங்கம் ஒரு பவுன் வழங்கப்படும் எனும் அறிவிப்பும் உள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களால் மக்கள் பயன்பெற்றுள்ள நிலையில் புதிய திட்டங்களும் நிறைவேற்றப்பட அதிமுகவுக்கு வாக்காளர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.

செட்டியார்கடையில் தொடங்கிய பிரசாரம் உப்புபாளையம், அல்லிநாயக்கன்பாளையம், பச்சாம்பாளையம், படைவீடு உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டது.

குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்களிடம் வாக்கு சேகரிப்பு

மே 06,2016,

குமாரபாளையம், பள்ளிபாளையம் நகரப் பகுதிகளில் விசைத்தறித் தொழிலாளர்களிடம் அதிமுக வேட்பாளரும், தமிழக தொழில், போக்குவரத்துத் துறை அமைச்சருமான பி.தங்கமணி கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

வீதிகள்தோறும் வீடு, வீடாக கட்சி நிர்வாகிகளுடன் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் தங்கமணி, கடந்த ஐந்தாண்டுகளில் குமாரபாளையம் தொகுதியில் ரூ.262 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், குமாரபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை உள்பட பல்வேறு பெருநகரங்களுக்கு பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

விசைத்தறித் தொழிலாளர்களின் நலனுக்கு அதிமுக ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை விளக்கிக் கூறிய அமைச்சர் பி.தங்கமணி தொடர்ந்து திட்டங்களை நிறைவேற்ற அதிமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

குமாரபாளையம் நகர அதிமுக செயலர் ஏ.கே.நாகராஜன், முன்னாள் நகரச் செயலர் எம்.எஸ்.குமணன், பள்ளிபாளையம் நகர்மன்றத் தலைவர் பி.எஸ்.வெள்ளியங்கிரி, ஒன்றியக் குழுத் தலைவர் எஸ்.செந்தில், ஒன்றியச் செயலர் பி.என்.கந்தசாமி, தொகுதிச் செயலர் சுப்பிரமணி, குமாரபாளையம் நகர்மன்றத் துணைத் தலைவர் கேஎஸ்எம்.பாலசுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றிருந்தனர்.

சேந்தமங்கலம் அதிமுக வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு

மே 04,2016,

சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சி.சந்திரசேகரன் பவித்திரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரித்தார்.

எருமபட்டி கிழக்கு ஒன்றியம் பவித்திரம், பவித்திரம் புதூர், அம்பாயிபாளையம், நவலடிப்பட்டி ஆகிய பகுதிகளில் அவர் வீடு, வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தார். அதிமுக நிர்வாகிகள் உடன் சென்றனர்.

குமாரபாளையம் கிராமங்களில் அதிமுகவினர் பிரசாரம்

மே 01,2016,

குமாரபாளையம், சுற்றுப்பகுதி கிராமங்களில் அதிமுகவினர் வாக்குச் சேகரிக்கும் பணியில் சனிக்கிழமை தீவிரமாக ஈடுபட்டனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட சாதனைத் திட்டங்களை மக்கள் கூடுமிடங்களில் டிஜிட்டல் திரைகளில் திரையிடப்பட்டு பிரசாரம் செய்யப்பட்டது. குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் திரையிடப்பட்ட இச்சாதனை விளக்கப் பிரசாரம் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தது.

மேலும், குமாரபாளையம், பள்ளிபாளையம் நகரப் பகுதி, கிராமங்களில் அதிமுக மகளிரணியினர் சீருடையுடன் வீடு, வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான பி.தங்கமணிக்கு ஆதரவளிக்கக் கோரி பிரசாரத்தில் ஈடுபட்டனர். குப்பாண்டபாளையம், சுற்றுப் பகுதி கிராமங்களில் அமைச்சர் பி. தங்கமணி திறந்த வேனில் சென்று, அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைக் கூறி வாக்குகளைச் சேகரித்தார்.

இதில், பள்ளிபாளையம் ஒன்றியச் செயலர் பி.என்.கந்தசாமி, ஒன்றியக் குழுத் தலைவர் எஸ்.செந்தில், குமாரபாளையம் தொடக்க வேளாண் கடன் சங்கத் தலைவர் வி.தேவராஜன் உள்ளிட்ட அக் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

குமாரபாளையம் தொகுதியில் அமைச்சர் தங்கமணி மனுத் தாக்கல்

ஏப்ரல் 29,2016,

குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட தமிழக தொழில், போக்குவரத்துத் துறை அமைச்சரும், அதிமுக வேட்பாளருமான பி.தங்கமணி வியாழக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான பி.தங்கமணி, நகராட்சி அலுவலகம் அருகேயுள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்தார்.

குமாரபாளையம் நகர்மன்ற தலைவர் சிவசக்தி கே.தனசேகரன், முன்னாள் நகரச் செயலர் எம்.எஸ்.குமணன், துணைத் தலைவர் கேஎஸ்எம்.பாலசுப்பிரமணி, பள்ளிபாளையம் ஒன்றியச் செயலர் பி.என்.கந்தசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கே.எஸ்.முரளிகிருஷ்ணனிடம், அமைச்சர் தங்கமணி மனுத் தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மீண்டும் அதிமுக வெற்றி பெறுவதோடு, சாயப்பட்டறை பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும். இதற்கான அனைத்துப் பணிகளும் முடிவடைந்துவிட்டன.

ஆனங்கூர் சாலையில் இரு இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைக்கவும், குமாரபாளையத்தில் நீதிமன்றம், வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 5 ஆண்டுகளில் ரூ.278 கோடியில் திட்டங்கள் இத் தொகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.

குமாரபாளையத்தில் அதிமுக மகளிரணியினர் தீவிர பிரசாரம்

ஏப்ரல் 26,2016,

குமாரபாளையத்தில் அதிமுக மகளிரணி சார்பில் வாக்காளர்களை வீடு, வீடாக நேரில் சந்தித்து வாக்குகள் சேகரிக்கும் தீவிரப் பிரசாரம் திங்கள்கிழமை தொடங்கியது.

இப் பிரசாரத்தை குமாரபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளரும், தமிழக தொழில், போக்குவரத்துத் துறை அமைச்சருமான பி.தங்கமணி தொடக்கி வைத்தார். குமாரபாளையம் நகர அதிமுக செயலர் ஏ.கே.நாகராஜன், முன்னாள் நகரச் செயலர் எம்.எஸ்.குமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகர மகளிரணிச் செயலர் எஸ்.பச்சியம்மாள், மாவட்ட மகளிரணி துணைச் செயலர் ஜெ.விஜயலட்சுமி ஸ்ரீ உள்பட 30 மகளிரணி நிர்வாகிகள் கொண்ட குழுவினர் 33 வார்டுகளிலும் வீடுகள்தோறும் அதிமுக அரசின் ஐந்தாண்டு சாதனைகளை எடுத்துக் கூறுவதோடு, மீண்டும் அதிமுக ஆட்சியமைக்கவும், குமாரபாளையம் தொகுதி வேட்பாளரான தங்கமணிக்கு வாக்களிக்கக் கோரி பிரசாரத்தில் ஈடுபடுவர்.

நகர்மன்ற துணைத் தலைவர் கேஎஸ்எம்.பாலசுப்பிரமணி, உறுப்பினர்கள் ஏஜிஎன்.திருநாவுக்கரசு, ஆர்.முருகேசன், கே.ஆர்.பாஸ்கரன், நகர அவைத் தலைவர் எஸ்.என்.பழனிச்சாமி, நிர்வாகிகள் சி.ஜெ.அர்ச்சுணன், வெங்கடாசலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

குமாரபாளையம் தொகுதி வேட்பாளர் தங்கமணி அறிமுக கூட்டம்

ஏப்ரல் 17, 2016,

கடந்த 5 ஆண்டுகால சாதனைத் திட்டங்களால் அ.தி.மு.க. மீண்டும் வரலாறு காணாத வெற்றியைப் பெறும் என, அ.தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

குமாரபாளையத்தில் அ.தி.மு.க. தேர்தல் பிரசாரக் கூட்டம் நகரச் செயலர் ஏ.கே.நாகராஜன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குமாரபாளையம் தொகுதி வேட்பாளரும், அமைச்சருமான பி.தங்கமணியை அறிமுகம் செய்துவைத்து நாஞ்சில் சம்பத் பேசியது:

தடைகளைத் தகர்த்து சாதனைப் பெண்ணாக விளங்குகிறார் முதல்வர் ஜெயலலிதா. முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து வெற்றி பெற்றதுடன், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டினார்.

தி.மு.க. ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு பாதிக்கப்பட்டதால், உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் தாக்கப்பட்டார். ஆனால், தற்போது தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு நிலைநாட்டப்பட்டதுடன், அமைதிப் பூங்காவாக விளங்குகிறது. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அத்துமீறல், அதிகார துஷ்பிரயோகம் என்பது இல்லை.

திரும்பிய பக்கமெல்லாம் ஏழை, எளியோர் பயனடையும் வகையில் நாளொன்றுக்கு ஒரு கோடி பேர் உணவருந்திச் செல்லும் “அம்மா’ உணவகங்கள், அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் தாய்மார்கள் குழந்தைக்கு பாலூட்டுவதில் உள்ள சிரமத்தைப் போக்க, பாலூட்டும் அறைகள் ஏற்படுத்தப்பட்டன. மாற்றுக் கட்சியினரையும் மனிதாபிமானத்துடன் பார்ப்பவர்கள் அ.தி.மு.க.வினர்.

அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைக்கு 16 வகையான பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. உலகளவில் 65 நாடுகளில் பரவியுள்ள தமிழர்கள் மீண்டும் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும் எதிர்பார்க்கின்றனர். அரசின் சாதனைத் திட்டங்களால் சட்டப் பேரவைத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை அ.தி.மு.க. பெறும் என்றார்.

இதில், ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் சி.செல்வக்குமார சின்னையன், குமாரபாளையம் நகர்மன்றத் தலைவர் சிவசக்தி கே.தனசேகரன், முன்னாள் நகரச் செயலர் எம்.எஸ்.குமணன், நகர துணைச் செயலர் ஏ.ஜி.என்.திருநாவுக்கரசு, நகர்மன்ற துணைத் தலைவர் கே.எஸ்.எம்.பாலசுப்பிரமணி, நகர்மன்ற உறுப்பினர்கள் ஆர்.முருகேசன், கே.ஆர்.பாஸ்கரன், சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Thangamani.P AIADMK 91077

History of Namakkal District

Namakkal Fort

Namakkal is a historic town with reference back to at least 7th century. The name Namakkal derives from Namagiri, which is the name of the single rock formation at the center of the town.Two cave temples at Namakkal were called as Adiyendra Visnugrha (Ranganatha swamy Temple) and Adiyanavaya Visnugrha (Narasimha swamy Temple).These Rock cut shrines were built by King Gunaseela of Adhiyaman clan descendant. Because of his marriage relations with Pallavas the temples were built of Pallava Architectural style during 7th century. Generally, Namakkal is considered to be a Vaishnava Kshetram, and there is no Shiva temple in the town until a few years ago. The rock is enormous – 65 meters high and more than a kilometre in circumference. Over this massive rock, is a fort. The fort over the rock were built by Ramachandra Nayakar, a small king who ruled Namakkal during 16th century. It is believed that Tippu Sultan hide himself in this fort for some time to escape the British. The fort was not built by Tippu Sultan but he occupied it for a brief period of time.Later the fort was captured by British. The front side of the hill is called Thiru. Vi. Ka. Paarai and used by taxis as their stand. Mahatma Gandhi held a public meeting in 1933 in Namakkal under the slope of the Namakkal rock. It is one of the few places in Tamil Nadu, that has not been seriously affected by famine and war.

It is a part of Kongu Nadu (Kongu Desam) region of Tamil Nadu which was hotly contested and coveted by both the ancient Pallavas and the Pandyas. Namakkal was in the hands of Atiakula King called Gunasila who has marriage with Pallava King. Later the taluk was overrun by the Cholas in the Kongu Mandalam .After the struggle between the Cheras, Cholas and Pandiyas, the Hoysalas rose to power and had control till the 14th century followed by Vijayanagar Kings till 1565 AD. Then the Madurai Nayakas came to power in 1623 AD. Two of the Polygons of Thirumalai Nayak namely, Ramachandra Nayaka and Gatti Mudaliars ruled the Salem area. The Namakkal Fort is reported to have been built by Ramachandra Nayakas. After about 1625 AD, the area came successively under the rule of Muslim Sultans of Bijapur and Golkonda Mysore kings and then the Marathas, when about the year 1750 AD. Hyder Ali came to power. During this period, it was a history of power struggle between Hyder Ali and later Tippu, with the British. The Rock Fort in Namakkal is a special feature of the Town. The Fort covers an area of one and half acres of flat surface and is accessible from South-West by a flight of narrow steps. Namakkal was held by Killdhar (Caption) on Hyder Ali until it was captured by British in 1768. For a brief period during late 18th and early 19th century Namakkal was under Tiruchirappalli district of British Rule. Later Namakkal was transferred back to Salem District.

Namakkal is declared Eco-Friendly town, know as an Industrial hub and one of the pilgrimage centres in down south. In the heart of the town a hillock of single rock and a fort on the top acknowledged as a National Monument. the hillock known as Namagiri lend its name to the town. Namakkal is an eminent town right from Himalaya and down to Kanyakumari because of Kavingnar Ramalingam Pillai, the poet and enthusiastic devotee of Namagiriamman, Sri Narahari Aachar and the Mathematic wizard Ramanujar, are born and brought up from here. The hillock also known as Sri Salagramam means the image of Maha Vishnu or a divine stone.

 

Namakkal District Map

Namakkal Area:

Area Sq. Km: 3.420

Namakkal Population:

Male: 869,280
Female: 857,321
Total: 1,726,601

Literacy Rates

Male: 82.64 %
Female: 66.57 %
Total: 74.63 %