Ramanathapuram

Ramanathapuram is a state assembly constituency in Tamil Nadu. It is a component of Ramanathapuram Lok sabha constituency.

Total Voters:

Male: 1,41,031
Female: 1,40,514
Transgender: 18
Total: 2,81,563

 

தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக்கு மகளிரணி முக்கிய பங்காற்ற வேண்டும் மாநில இணை செயலாளர் பேச்சு

தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக்கு மகளிரணி முக்கிய பங்காற்ற வேண்டும் மாநில இணை செயலாளர் பேச்சுஏப்ரல் 23, 2016

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக்கு மகளிரணி முக்கிய பங்காற்ற வேண்டும் என்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாநில இணை செயலாளர் விஜிலாசத்தியானந்த் பேசினார்.

ஆலோசனை கூட்டம்

சட்டமன்ற தேர்தலையொட்டி ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. மகளிரணி ஆலோசனை கூட்டம் மாவட்ட மகளிரணி செயலாளர் கவிதா சசிக்குமார் தலைமையில் நடைபெற்றது. அன்வர்ராஜா எம்.பி., மாவட்ட செயலாளர் தர்மர், அவை தலைவர் செ.முருகேசன், வேட்பாளர் டாக்டர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் மாநில மகளிரணி இணை செயலாளர் விஜிலா சத்தியானந்த் கலந்து கொண்டு பேசியதாவது:– சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட கல்வி உள்ளிட்ட அனைத்து தகுதிகளையும் உடைய வேட்பாளர்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தேர்வு செய்துள்ளார். இவர்கள் அனைவரையும் வெற்றி பெற வைப்பது நமது கடமை.

அ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிடும் 234 வேட்பாளர்களையும் வெற்றி பெற வைத்து ஒரே கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட அரசாக இந்தியாவில் தமிழகம் சாதனை படைக்க வேண்டும். பெண்கள் மீது முதல்–அமைச்சர் ஜெயலலிதாவிற்கு எப்போதும் தனி அக்கறையும், பாசமும் உண்டு. இதனால் தான் பெண்களுக்கு சரிபாதியாக இடஒதுக்கீடு வழங்கி உள்ளார். இந்தியா முழுவதும் 33 சதவீதம் இடஒதுக்கீடு என்று முழங்கி கொண்டிருக்கும் வேளையில் 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி சரித்திர சாதனை படைத்துள்ளார். அவருடைய திட்டங்களை அன்னை தெரசாவும், ஹிலாரி கிளிண்டனும் பார்த்து பாராட்டி உள்ளனர். மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றுவதில் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஜெயலலிதா தான் ரோல்மாடல். இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு மிக்க மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

தலா 50 வீடுகள்

தேர்தலில் மகளிரணி நிர்வாகிகள் அனைவரும் தலா 50 வீடுகளை கையில் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று ஜெயலலிதாவின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். வீட்டில் உறுப்பினர்களை போல் அமர்ந்து பேசி அந்த வீட்டு உறுப்பினர்கள் அனைவரையும் அ.தி.மு.க.விற்கு ஆதரவாக மாற்ற வேண்டும். அ.தி.மு.க.வில் தான் மகளிரணி பலமாக உள்ளது. அந்த மகளிரணி நிர்வாகிகள் கடுமையாக உழைத்து தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ வேண்டும்.

தேர்தலில் .தி.மு.. வெற்றிக்கு மகளிரணி முக்கிய பங்காற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ஜி.முனியசாமி, ஆனிமுத்து, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சேதுபாலசிங்கம், ஒன்றிய செயலாளர் அசோக்குமார், முன்னாள் நகர் செயலாளர் வரதன், முன்னாள் பாசறை செயலாளர் ஸ்டாலின் ஜெயச்சந்திரன், மாணவரணி செயலாளர் செந்தில்குமார், தொகுதி இணை செயலாளர் தஞ்சி சுரேஷ்குமார், சிறுபான்மைபிரிவு செயலாளர் தர்வேஸ், மகளிரணி சவுந்திரவள்ளி, பொதுக்குழு உறுப்பினர் ஜெய்லானி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

ராமேசுவரத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

ஏப்ரல் 18,2016,

ராமேசுவரத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.

   கூட்டத்துக்கு, ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் அன்வர்ராஜா தலைமை வகித்து, ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மணிகண்டனை அறிமுகப்படுத்திப் பேசினார்.  ராமேசுவரம் அதிமுக நகரச் செயலர் பெருமாள் வரவேற்புரையாற்றினார். அதிமுக ராமநாதபுரம் மாவட்டச் செயலர் தர்மர், முன்னாள் மாவட்டச் செயலர் ஜி. முனியசாமி, ராமேசுவரம் நகர்மன்றத் தலைவர் அர்ச்சுனன், துணைத் தலைவர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், மண்டபம் ஒன்றிய இளைஞர் அணி முன்னாள் செயலர் எஸ்.ஆர். கணேசன், பிரப்பன்வலசை கூட்டுறவு வங்கித் தலைவர் வீரபத்திரன், ராமநாதபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலர் கே.கே. அர்ச்சுனன், ராமேசுவரம் அம்மா பேரவைச் செயலர் கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக்கல்லூரி கொண்டு வரப்படும் அ.தி.மு.க. வேட்பாளர் மணிகண்டன் பேட்டி

Government-Medical-College-in-Ramanathapuram--Be-brought_SECVPFசெவ்வாய், ஏப்ரல் 12,2016,

ராமேசுவரம்,

ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக்கல்லூரி கொண்டு வரப்படும் என்று ராமநாதபுரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மணிகண்டன் பேட்டியின்போது கூறினார்.

வாக்குசேகரிப்பு
ராமநாதபுரம் தொகுதி அ.தி.மு.க. கட்சியின் வேட்பாளர் டாக்டர்.மணிகண்டன் ராமேசுவரம் பகுதியில் வாக்கு சேகரித்தார்.அப்போது வேட்பாளர் மணிகண்டன், அன்வர்ராஜா எம்.பி. ஆகியோரை ராமேசுவரம் நகரசபை தலைவர் அர்ச்சுனன், துணை தலைவர் குணசேகரன், நகர் செயலாளர்பெருமாள், திருக்கோவில் அண்ணா தொழிற் சங்க தலைவர்அண்ணாதுரைஆகியோர் வரவேற்றனர். ராமேசுவரம் கோவில் 4 ரத வீதிகளிலும் உள்ள கடைகள், வீடுகளில் கட்சி நிர்வாகி களுடன் சென்று வேட்பாளர் வாக்கு சேகரித்தார். அதன்பின் அகில இந்திய யாத்திரை பணியாளர்கள் சங்க அலுவலகத்திற்கு சென்று ஆதரவு கேட்டார். அவரை சங்க தலைவர் மகேந்திரன் வரவேற்றார்.

தொடர்ந்து விசைப்படகு மீனவர் சங்க தலைவர்கள் சேசுராஜா, எமரிட் மற்றும் ராமேசுவரத்தில் உள்ள பல்வேறு சமுதாய தலைவர்கள், நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், பல்வேறு அமைப்பின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து வேட்பாளர் ஆதரவு கேட்டார். இதில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தர்மர், அவை தலைவர் முருகேசன், ராமநாதபுரம் தொகுதி கழக இணை செயலாளர் தஞ்சி சுரேஷ், எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் கே.கே.அர்ச்சுனன், அவை தலைவர் பிச்சை, மாவட்ட பிரதிநிதிகள் அயோத்தி, முத்துராமலிங்கம் கலந்துகொண்டனர்.

பின்னர் வேட்பாளர் மணிகண்டன் நிருபர்களிடம் கூறியதாவது:– அ.தி.மு.க. கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆசியுடன் ராமநாதபும் தொகுதியில் போட்டியிடுகிறேன். ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி இல்லாத நிலை இருந்து வருகிறது. வெற்றி பெற்றவுடன் முதல்–அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி கொண்டு வர பாடுபடுவேன்.

போட்டி தேர்வுகள்

மீனவர்களுக்கு எந்த பிரச்சினையாக இருந்தாலும் உறுதுணையாக இருப்பேன். லஞ்சம், ஊழலற்ற முறையில் நேர்மையாக எனது பணியை சிறப்பாக செய்வேன். ராமநாதபுரம் மாவட்டத்தில் பலர் ஐ.பி.எஸ்., குரூப்–4 உள்ளிட்ட அரசு போட்டி தேர்வுகள் எழுத மையம் உருவாக்க பாடுபடுவேன். அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

வாக்குசேகரிப்பில் அண்ணா தொழிற்சங்க தலைவர் அண்ணாதுரை, மின்வாரிய பிரிவு கோட்ட செயலாளர் முருகேசன், கவுன்சிலர் ராதாகிருஷ்ணன்,சரவணன், கட்சி நிர்வாகிகள் பி.ஜி.சேகர், முனியசாமி, முத்துராமன், வஸ்தாவிவெற்றிவேல், அன்னகர்ணன், கலைச்செல்வன், பால்ராஜ், ஸ்ரீகாந்த், துரை, மாங்குடிசெந்தூரான் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Jawahirulla MAMAK 65831
Thirteenth 2006-2011 Hussan Ali.K. INC 66922
Twelfth 2001-06 Anwer Rhazza A ADMK 59824
Eleventh 1996-01 Rahmankhan, A. DMK 59794
Tenth 1991-96 Thennavan M. ADK 62004
Ninth 1989-91 Rajenthiran, M.S.K. DMK 38747
Eighth 1984-89 T. Ramasamy ADK 56342
Seventh 1980-84 Ramasamy, T. ADK 46987
Sixth 1977-80 T. Ramaswamy ADK 33048
Fifth 1971-77 Sathiyendran M. S. K. DMK 40690

History of Ramanathapuram District

Pamban Bridge

Ramanathapuram also known as Ramnad, is a city and a municipality in Ramanathapuram district in the Indian state of Tamil Nadu. It is the administrative headquarters of Ramanathapuram district and the second largest town (by population) in Ramanathapuram district.

In 1910, Ramanathapuram was formed by clubbing portions from Madurai and Tirunelveli district. Shri J.F. BRYANT I.C.S was the first collector. And this district was named as Ramanathapuram. During the British period this district was called “Ramnad”. The name continued after independence. Later the district was renamed as Ramanathapuram to be in conformity with the Tamil Name for this region.

Tourists visit Ramnad to see the Raja Palace, still occupied by the former Sethupaty Raja and his family. Although no longer in power, the family contributes to the community by setting up schools and hospitals. Ramanathapuram is close to Rameswaram and Devipattinam, both important pilgrimage centres.Uchipuli, a main tourist place, which connects through airways Ariyamaan Beach is one among the popular entertainment beaches in Uchipuli. Puduvalasai, Panaikulam, Alagankulam beaches are also popular in Ramnad.

 

Ramanathapuram District Map

Ramanathapuram Area:

Area Sq. Km: 4,104

Ramanathapuram Population:

Male: 682,658
Female: 670,787
Total: 1,353,445

Literacy Rates

Male: 87.81%
Female: 73.52%
Total: 80.72%