பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டுடன் அக்டோபரில் உள்ளாட்சித்தேர்தல் : பட்ஜெட்டில் தேர்தலுக்கு ரூ.183.24 கோடி ஒதுக்கீடு

பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டுடன் அக்டோபரில் உள்ளாட்சித்தேர்தல் : பட்ஜெட்டில் தேர்தலுக்கு ரூ.183.24 கோடி ஒதுக்கீடு

வெள்ளி, ஜூலை 22,2016, சென்னை – பெண்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டுடன் தமிழகத்தில் அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் உரையின் போது நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக பட்ஜெட் உரையில் கூறப்பட்டிருப்பதாவது, உள்ளாட்சி அமைப்புகளின் நிதிநிலையை மேம்படுத்துவதற்காகவும், அவை சுய சார்புடைய அமைப்புகளாக செயல்படுவதற்காகவும், மாநிலத்தின் சொந்தவரி வருவாயிலிருந்து அவற்றிற்கு மானியமாக நிதி பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. நான்காவது மாநில நிதிக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், மாநிலத்தின் சொந்த வரிவருவாயிலிருந்து கிராமப்புற

புதிய வரிகள் இல்லாத பட்ஜெட் : நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் சட்டசபையில் தாக்கல் செய்தார்

புதிய வரிகள் இல்லாத பட்ஜெட் : நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் சட்டசபையில் தாக்கல் செய்தார்

வெள்ளி, ஜூலை 22,2016, 2016-17 ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வியாழக்கிழமை சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். புதிய வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை.ஏழைகளுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்,ஆண்டு இறுதிக்குள் ஸ்மார்ட் ரேஷன் அட்டை வழங்கப்படும், அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் ஆகியவை நிதியமைச்சரின் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்களாகும். தமிழக சட்டபேரவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் ஜெயலலிதா

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் : நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் : நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்

வியாழன் , ஜூலை 21,2016, சென்னை  – தமிழக சட்டசபை இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது. நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததை தொடர்ந்து சட்டசபையில் 2016-2017-ம் ஆண்டுக்கான திருத்திய பட்ஜெட் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. சட்டசபை தேர்தல் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் 2016-2017-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு நடைபெற்ற சட்டசபை பொதுத்தேர்தலில்

கடும் அமளியிலும் நாடாளுமன்றத்தில் தூங்கிய ராகுல் காந்தி

கடும் அமளியிலும் நாடாளுமன்றத்தில் தூங்கிய ராகுல் காந்தி

வியாழன் , ஜூலை 21,2016, நாடாளுமன்றத்தில் நேற்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தூங்கிய வீடியோ தொலைக்காட்சிகளில் வெளியானது. இதனை சமூக வலைதளத்தில் பலர் பகிர்ந்து வருகின்றனர். குஜராத்தில் மாட்டை தோலை உரித்ததாக தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தை நேற்று காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் எழுப்பி அமளியில் ஈடுபட்டது. ஆனால் இந்த அமளிக்கு மத்தியிலும் ராகுல் காந்தி தூங்கிக் கொண்டிருந்தார்.அவர் தூங்கியதை லோக்சபா டிவி ஒளிபரப்ப, அதனை தனியார் சேனல்களும் ஒளிபரப்பியது. அவ்வளவு தான் சமூக

மாயாவதியை அவமதித்த தயாசங்கர் சிங்கை பாஜக-விலிருந்தே நீக்க வேண்டும் : முதல்வர் ஜெயலலிதா

மாயாவதியை அவமதித்த தயாசங்கர் சிங்கை பாஜக-விலிருந்தே நீக்க வேண்டும் : முதல்வர் ஜெயலலிதா

வியாழன் , ஜூலை 21,2016, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியை தரக்குறைவாக விமர்சனம் செய்த தயாசங்கர் சிங்கை கட்சியிலிருந்தே நீக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒடுக்கப்பட்டவர்களின் நிகரில்லாத் தலைவராக உத்திரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்களாலும், மற்றவர்களாலும் மதிக்கப்படுபவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாயாவதி ஆவார். சமீபத்தில் குஜராத்தில் நடந்த நிகழ்வை கண்டித்து இவர் கடந்த சில தினங்களாக

அமராவதி அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு : 32,770 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற நடவடிக்கை

அமராவதி அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு : 32,770 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற நடவடிக்கை

வியாழன் , ஜூலை 21,2016, திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து, திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு இன்று முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 32 ஆயிரத்து 770 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரி அமராவதி பழைய மற்றும்