திங்கள் , ஜூன் 27,2016, ஏழை எளிய நடுத்தர மக்களின் பசியைப் போக்கும் வகையில், முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழ்நாட்டில் தொடங்கிய அம்மா உணவகங்கள் ஆந்திராவிலும் தொடங்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் ஜெயலலிதா, நாட்டிற்கே வழிகாட்டியாகவும், முன் உதாரணமாகவும் செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று அம்மா உணவகம். ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வயிற்றுக்கு நெருக்கமான இந்தத் திட்டம், தமிழகத்தின் அடித்தட்டு மக்களுக்கு ஆணிவேராய்த் திகழ்கிறது. காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் இங்கு குறைவான விலையில்
பள்ளிவாசல்களுக்கு விலையில்லா உயர்தர அரிசி வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மனிதநேய ஜனநாயகக் கட்சி நன்றி
இருப்பு உள்ள பொருட்கள் குறித்து குடும்ப அட்டைதாரர்களுக்கு முன்கூட்டியே செல்போனுக்கு தகவல் : நியாய விலைக்கடைகளில் புதிய வசதி அறிமுகம்
முதலமைச்சர் ஜெயலலிதா,தொடங்கிய அம்மா உணவகங்கள் போல் ஆந்திராவிலும் தொடங்கப்பட்டன : சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்
நடுக்கடலில் தத்தளித்த நாகை மீனவர்கள் நாகை மீன்வளத்துறை உதவியுடன் கரை திரும்பினர் – முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மீனவர்கள் நன்றி
திங்கள் , ஜூன் 27,2016, நடுக்கடலில் என்ஜின் பழுதாகி கடந்த 5 நாட்களாக தத்தளித்து வந்த நாகை மீனவர்கள், அம்மாவட்ட மீன்வளத்துறை உதவியுடன் கரை திரும்பினர். தங்களை மீட்க உடனடி நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, கரை திரும்பிய மீனவர்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர். நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள், கடந்த 14-ம் தேதி இரவு, படகு ஒன்றில் மீன்பிடிக்கச்சென்றனர். வழக்கமாக 20-ம் தேதிக்கு திரும்ப வேண்டிய படகு கரைக்கு வராததால், அதிர்ச்சியடைந்த அப்பகுதி மீனவர்கள்,
முதலமைச்சர் ஜெயலலிதா,இஸ்லாமியர்களின் பாதுகாவலராக திகழ்வதாக மதுரையில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பாராட்டு
திங்கள் , ஜூன் 27,2016, முதலமைச்சர் ஜெயலலிதா, இஸ்லாமியர்களின் நலனுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தி இஸ்லாமியர்களின் பாதுகாவலராக திகழ்வதாக, மதுரையில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மதுரை மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சிறுபான்மையினர் நலப்பிரிவு சார்பில், வக்பு வாரியக்கல்லூரியில், இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் திரு. செல்லூர் கே.ராஜு, ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகையில், முதலமைச்சர் ஜெயலலிதா, இஸ்லாமியர்களின் நலனுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தி இஸ்லாமியர்களின் பாதுகாவலராக
ஈரானிலிருந்து மீட்கப்பட்ட 4 மீனவர்கள் புதுவாழ்வை தொடங்க தலா ரூ.2 லட்சம் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
திங்கள் , ஜூன் 27,2016, சென்னை : ஈரான் நாட்டு சிறையில் இருந்து விடுதலையான குமரி மாவட்டத்தை சேர்ந்த 4 மாணவர்கள் புதுவாழ்வு தொடங்க தலா ரூ 2 லட்சம் உதவித்தொகை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு முதலமைச்சர் ஜெயலலிதா ஈரான் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 4 தமிழக மீனவர்களின் குடும்ப வறுமை நிலையினைக் கருத்தில் கொண்டு, விடுதலையான மீனவர்கள் தமிழ்நாட்டில் புது வாழ்வை துவங்க ஏதுவாக முதலமைச்சரின்