கட்சிக்கு சசிகலா, ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி : கட்சிக்கு சசிகலா, ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி : ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ

கட்சிக்கு சசிகலா, ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி : கட்சிக்கு சசிகலா, ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி : ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ

ஆகஸ்ட் 29, 2017 ,செவ்வாய்க்கிழமை,  மதுரை : திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏ.கே.போஸ், கட்சிக்கு சசிகலாவையும், ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமியையும் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் 8 அதிமுக எம்எல்ஏ-க்களும் ஈபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக உள்ளனர். இதில் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏ.கே.போஸ் மட்டும் மேலூரில் நடந்த டிடிவி. தினகரன் கூட்டத்தில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் செல்லவில்லை. அவரையும், மேலும், 2 எம்எல்ஏ-க்களையும் உள்ளூர் அமைச்சர் ஒருவர் கடத்தியதாக மேலூர் பொதுக்கூட்ட மேடையிலேயே டிடிவி. தினகரன்

தினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனை கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள்

தினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனை கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள்

ஆகஸ்ட் 28, 2017 ,திங்கட்கிழமை, சென்னை : தினகரனின் நியமன அறிவிப்புகள் செல்லாது என்றும் டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளேடும், ஜெயா டி.வி.யும் செயல்படுவதை உறுதி செய்ய சட்ட ரீதியாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதென சென்னையில் இன்று நடைபெற்ற அ.தி.மு.க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் உள்ள அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அதன்

ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணம் கிடையாது,கட்சியைக் காப்பாற்றவே ஒன்றிணைந்துள்ளோம் : டிடிவி தினகரன் பேட்டி

ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணம் கிடையாது,கட்சியைக் காப்பாற்றவே ஒன்றிணைந்துள்ளோம் : டிடிவி தினகரன் பேட்டி

ஆகஸ்ட் 27 , 2017 ,ஞாயிற்றுக்கிழமை, தேனி : ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணம் கிடையாது. கட்சியைக் காப்பாற்றவே ஒன்றிணைந்துள்ளோம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக தேனியில் இன்று செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது:- ”இன்றைக்கு நடைபெறுவது தியாகத்திற்கும் துரோகத்திற்குமான யுத்தம். 122 எம்.எல்.ஏக்களும் எங்களுக்கு ஆதரவானவர்கள்தான். பதவிக்காகவே ஒருசிலர் செயல்பட்டு வருகிறார்கள். அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் 90% பேர் எங்களால் அடையாளம் காட்டப்பட்டவர்கள். ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையில்தான் புதுச்சேரியில் எம்எல்ஏக்கள் தங்கியுள்ளனர்; வேறு எந்த பயத்தினாலோ

கடவுளைத் தவிர யாராலும் எங்களை மிரட்ட முடியாது : அ.தி.மு.க அம்மா அணியின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன்

கடவுளைத் தவிர யாராலும் எங்களை மிரட்ட முடியாது : அ.தி.மு.க அம்மா அணியின் துணை பொது செயலாளர்  டிடிவி தினகரன்

ஆகஸ்ட் 26 , 2017 ,சனிக்கிழமை, சென்னை : “கடவுளைத் தவிர யாராலும் எங்களை மிரட்ட முடியாது என அ.தி.மு.க அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அ.தி.மு.க.வில் தனித்தனியாக செயல்பட்டு வந்த எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றாக இணைந்ததை தொடர்ந்து, தமிழக அரசியல் களத்தில் அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு உள்ளன. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து,

டி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் 19 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் : ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்க உத்தரவு

டி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் 19 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் : ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்க உத்தரவு

ஆகஸ்ட் 25 , 2017 ,வெள்ளிக்கிழமை,  சென்னை : டி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் எம்.எல்.ஏக்கள் 19 பேருக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் இந்த நோட்டீசுக்கு ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில், அ.தி. மு.க. இரு அணிகள் இணைந்தன. முதல்வராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளனர். இந்நிலையில், கட்சியை வழி நடத்த ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு குழு அமைக்கப்பட்டு உள்ளது. அ.தி.மு.க. அணிகள் இணைய வேண்டும் என்று கூறி வந்த டி.டி.வி.தினகரன் தற்போது

அனைவரும் அமைதியான, மகிழ்ச்சியான வாழ்வு வாழ வேண்டும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

அனைவரும் அமைதியான, மகிழ்ச்சியான வாழ்வு வாழ வேண்டும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

ஆகஸ்ட் 25 , 2017 ,வெள்ளிக்கிழமை, சென்னை : மக்கள் அனைவரும் அமைதியான, மகிழ்ச்சியான பெருவாழ்வு வாழ வேண்டும் என்று விநாயகர் சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள “விநாயகர் சதுர்த்தி” வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:- முழுமுதற்கடவுளான விநாயகப் பெருமானின் திருஅவதாரத் திருநாளான விநாயகர் சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்