கேரளா கோயில் தீ விபத்து,முதல்வர் ஜெயலலிதா இரங்கல் : கேரள அரசுக்கு உதவ மருத்துவ குழுவை அனுப்பினார்

கேரளா கோயில் தீ விபத்து,முதல்வர் ஜெயலலிதா இரங்கல் : கேரள அரசுக்கு உதவ மருத்துவ குழுவை அனுப்பினார்

திங்கள் , ஏப்ரல் 11,2016, கேரளா மாநிலத்தில் பரவூர் கோவிலில் நடந்த  தீ விபத்தில் பலியானவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். கேரளாவில் கோவிலில் நடந்த பட்டாசு தீ விபத்தில் பலியானவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், 100 பேருக்கு மேல் உயிரிழப்பு எற்பட்ட இச்சம்பவம் மோசமான துயர சம்பவம், பலியானவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கேரள பட்டாசு விபத்தில் பாதிக்கப்பட்டு காயம்

இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 96 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர் : தங்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மீனவர்கள் நன்றி

இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 96 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர் : தங்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மீனவர்கள் நன்றி

ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 10, 2016, முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட துரித நடவடிக்கைகளால், இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 96 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர். தமிழகத்தின் பல்வேறு கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 99 மீனவர்கள், தங்கள் பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லைத் தாண்டி வந்ததாக கூறி, அவர்களை இலங்கை கடற்படையினர், படகுகளுடன் பிடித்துச் சென்றனர். நீதிமன்ற விசாரணைக்கு பின்னர், இம்மீனவர்கள் அனைவரும் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டு, வாடி வந்தனர். இவர்களை விரைவில் விடுதலை செய்ய வேண்டுமென

முதலமைச்சர் ஜெயலலிதா, கழக வேட்பாளர்களையும், தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்களையும் ஆதரித்து, விருத்தாசலத்தில் நாளை பிரச்சார பொதுக்கூட்டத்தில் எழுச்சிமிகு உரையாற்றுகிறார்

தமிழகம் முழுவதிலும் அ.இ.அ.தி.மு.க. தேர்தல் பணிமனைகள் திறக்கப்பட்டு 234 தொகுதிகளிலும் முதலமைச்சரின் சாதனைகளைப் பட்டியலிட்டு கழக வேட்பாளர்கள், தொண்டர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்

தமிழகம் முழுவதிலும் அ.இ.அ.தி.மு.க. தேர்தல் பணிமனைகள் திறக்கப்பட்டு 234 தொகுதிகளிலும் முதலமைச்சரின் சாதனைகளைப் பட்டியலிட்டு கழக வேட்பாளர்கள், தொண்டர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்

ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 10, 2016. அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா ஆணைக்கிணங்க, தமிழகம் முழுவதிலும் அ.இ.அ.தி.மு.க. தேர்தல் பணிமனைகள் திறக்கப்பட்டன. 234 தொகுதிகளிலும் முதலமைச்சரின் சாதனைகளைப் பட்டியலிட்டு, கழக வேட்பாளர்கள், தொண்டர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறந்து வைத்து பிரச்சாரம் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் ஆர்.பி. மருதராஜா எம்.பி. உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். இதேபோல், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்றத் தொகுதியிலும்,

சென்னையில் உள்ள 21 தொகுதிகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் : பட்டியலிட்டு முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

சென்னையில் உள்ள 21 தொகுதிகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் : பட்டியலிட்டு முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

ஞாயிறு, ஏப்ரல் 10,2016, சென்னையில் உள்ள 21 தொகுதிகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்ன? என்பதை பட்டியலிட்டு முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கினார். சென்னை தீவுத்திடலில் நேற்று நடைபெற்ற அ.தி.மு.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது; முக்கிய பணிகள் சென்னையில் உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் நிறைவேற்றப்பட்ட முக்கிய பணிகளில் சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில், காசிமேடு பகுதியில் அமைந்துள்ள மீன்பிடி துறைமுகம் 92 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவில்

இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ பொன்னுபாண்டி,மதிமுக எம்எல்ஏ வரதராஜன்,கக்கனின் மகள் பூமாலை காசி விஸ்வநாதன் மற்றும் பலர் முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்

இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ பொன்னுபாண்டி,மதிமுக எம்எல்ஏ வரதராஜன்,கக்கனின் மகள் பூமாலை காசி விஸ்வநாதன் மற்றும் பலர்  முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்

ஞாயிறு, ஏப்ரல் 10,2016, சென்னை தீவுத்திடலில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் இறுதியில் மக்கள் நலக்கூட்டணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ-வும் விருதுநகர் மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளருமான பொன்னுபாண்டி அதிமுகவில் சேர்ந்தார். அவரோடு விருதுநகர் முன்னாள் மதிமுக எம்எல்ஏ வரதராஜன், முன்னாள் அமைச்சர் கக்கனின் மகள் பூமாலை காசி விஸ்வநாதன், முன்னாள் எம்.பி. கலாநிதி, மன்னார்குடி தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஞானசுந்தரம் மற்றும் இசையமைப்பாளர்

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் சிறந்த ஆட்சி அமையும் : பிரசாரம் தொடங்கிய .சரத்குமார் பேட்டி

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் சிறந்த ஆட்சி அமையும் : பிரசாரம் தொடங்கிய .சரத்குமார் பேட்டி

ஞாயிறு, ஏப்ரல் 10,2016, “தமிழகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் சிறந்த ஆட்சி அமையும்“ என்று திருச்செந்தூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் கூறினார். அ.தி.மு.க. கூட்டணியில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் போட்டியிடுகிறார். இதையொட்டி திருச்செந்தூரில் சன்னதி தெருவில் தேர்தல் அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது. ஆர்.சரத்குமார் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் 234