ஈரோடு மாவட்டத்தில், தாமரைக்கரை – மணியாச்சி பள்ளம் ஓடையில் கட்டப்பட்டுள்ள புதிய பாலம் : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மலைவாழ் மக்கள் நெஞ்சார்ந்த நன்றி

ஈரோடு மாவட்டத்தில், தாமரைக்கரை – மணியாச்சி பள்ளம் ஓடையில் கட்டப்பட்டுள்ள புதிய பாலம் : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மலைவாழ் மக்கள் நெஞ்சார்ந்த நன்றி

செவ்வாய், மார்ச் 08,2016, ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியில், தாமரைக்கரை – மணியாச்சி பள்ளம் ஓடையில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தால் மலைவாழ் மக்கள் மிகுந்த பயனடைந்துள்ளனர். இதற்காக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு அப்பகுதி மக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர். அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதி கடல் மட்டத்திலிருந்து சுமார் ஆயிரத்து 100 மீட்டர் உயரமுடையது. இந்த மலைப்பகுதியில் தாமரைக்கரை – மணியாச்சி பள்ளம் என்ற ஓடை உள்ளது. இந்த ஓடையில் மழைக்காலங்களில் நீர்பெருக்கெடுத்து ஓடும் என்பதால், 35-க்கும்

அ.இ.அ.தி.மு.க. 234 தொகுதிகளிலும் வெற்றிபெற இந்திய குடியரசுக் கட்சி மற்றும் நாடார் பேரவை பாடுபடப்போவதாக அறிவிப்பு

அ.இ.அ.தி.மு.க. 234 தொகுதிகளிலும் வெற்றிபெற இந்திய குடியரசுக் கட்சி மற்றும் நாடார் பேரவை பாடுபடப்போவதாக அறிவிப்பு

செவ்வாய், மார்ச் 08,2016, தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. 234 தொகுதிகளிலும் வெற்றிபெற இந்திய குடியரசுக் கட்சி மற்றும் நாடார் பேரவை பாடுபடப்போவதாக தெரிவித்துள்ளன. இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. செ.கு. தமிழரசன், தர்மபுரியில் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்றபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தமிழகத்தில் வரும் சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. அரசு நிறைவேற்றியுள்ள பல்வேறு நலத்திட்டங்களை கிராமம் கிராமமாக, வீடு வீடாகச்சென்று மக்களிடம் எடுத்துக் கூறி, திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்ளப் போவதாகத்

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கத்தோடு சென்னையில் மாநகரப் பேருந்துகளுக்கு தனிப் பாதை அமைக்கத் தமிழக அரசு திட்டம்

போக்குவரத்து நெரிசலை  குறைக்கும் நோக்கத்தோடு சென்னையில் மாநகரப் பேருந்துகளுக்கு தனிப் பாதை அமைக்கத் தமிழக அரசு திட்டம்

செவ்வாய், மார்ச் 08,2016, சென்னையில் 96.7 கி.மீ. தொலைவுக்கு மாநகரப் பேருந்துகளுக்கென தனிப் பாதைகளை ஏற்படுத்துவதற்கான விரைவுப் போக்குவரத்து அமைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க தமிழக அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநகரப் பேருந்துகளுடன் தனியார் வாகனங்களும் செல்வதால் சென்னையின் முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்தப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், விரைவாகச் செல்லவும் மாநகரப் பேருந்துகளுக்கென்று தனிப் பாதைகள் அமைக்கும் திட்டத்தில்

மகளிர் மேம்பாட்டில் தமிழகம் முன்னோடி மாநிலம்: மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் முதல்வர் ஜெயலலிதா

மகளிர் மேம்பாட்டில் தமிழகம் முன்னோடி மாநிலம்: மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் முதல்வர் ஜெயலலிதா

பெண்கள் வாழ்வு மேம்படவும், பெண்ணுரிமையை உறுதிப்படுத்தும் வகையிலும், பெண்கள் இன்னல்களில் இருந்து விடுபடவும், அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும் தனது அரசு சிறப்பான பணிகளைச் செய்து வருவதாக முதல்வர் ஜெயலலிதா தனது மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: “மங்கையராகப் பிறப்பதற்கே – நல்ல மாதவஞ் செய்திட வேண்டும், அம்மா” — என்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் வாக்கிற்கேற்ப, பெண்மையின் உயர்வினை உலகிற்கு பறைசாற்றும் வகையில்

ஏழை – எளிய மாணவர்களும் பயன்பெறும் வகையில் திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டுள்ள அரசு புதிய மருத்துவக் கல்லூரி : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாணவர்கள் நெஞ்சார்ந்த நன்றி

ஏழை – எளிய மாணவர்களும் பயன்பெறும் வகையில் திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டுள்ள அரசு புதிய மருத்துவக் கல்லூரி : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாணவர்கள் நெஞ்சார்ந்த நன்றி

செவ்வாய், மார்ச் 08,2016, ஏழை – எளிய மாணவர்களும் பயன்பெறும் வகையில், திருவண்ணாமலையில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அதிநவீன முறையில் அமைத்துக் கொடுத்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அப்பகுதி மாணவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளது. எட்டாக்கனியாக இருந்த மருத்துவக்கல்லூரி படிப்பு சாதாரண மக்களுக்கும் கிடைக்கும் வகையில் புதிய மருத்துவக் கல்லூரியை அமைத்துத் தந்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாணவர்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை நகரின் புறவழிச்சாலையில் கடந்த 2013-ம் ஆண்டு 35 ஏக்கர் நிலப்பரப்பில் 132

தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

செவ்வாய், மார்ச் 08,2016, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 64 மீனவர்களையும், 77 மீன்பிடி படகுகளையும் உடனடியாக மீட்க நேரடியாக தலையிட வேண்டும் என்று பிரதமருக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதை தங்களின் கவனத்துக்கு வேதனையோடு கொண்டு வர விரும்புகிறேன். 2 தனித்தனி சம்பவங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 29 மீனவர்கள் 6.3.2016 அன்று (நேற்று முன்தினம் )

குடும்ப பிரச்சினையில் சிக்கியுள்ள கருணாநிதியால் மக்கள் பிரச்சினையை தீர்க்க முடியாது: ராமராஜன் பேச்சு

குடும்ப பிரச்சினையில் சிக்கியுள்ள கருணாநிதியால் மக்கள் பிரச்சினையை தீர்க்க முடியாது: ராமராஜன் பேச்சு

திங்கள் , மார்ச் 07,2016, பழனியில் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் அ.தி.மு.க. சார்பில் நடத்தப்பட்டது. இதில் நடிகர் ராமராஜன் கலந்து கொண்டு பேசியதாவது:– கடந்த 2011–ம் ஆண்டுக்கு முன்னர் அடையாளம் தெரியாமல் இருந்த விஜயகாந்தை எதிர்கட்சி தலைவராக உயர்த்தியவர் முதல்வர் ஜெயலலிதா. விஜயகாந்த் தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்த பிறகுதான் ஜெயலலிதாவின் அருமை அவருக்கு தெரியவரும். தி.மு.க.வில் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி என ஆளுக்கு ஒரு வழியில் செயல்படுகின்றனர். இதனால் கருணாநிதி குடும்ப பிரச்சினையில்

தன்னம்பிக்கையுடன் போராடி பெண்கள் சரித்திரம் படைக்க வேண்டும் : மகளிர் தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து

தன்னம்பிக்கையுடன் போராடி பெண்கள் சரித்திரம் படைக்க வேண்டும் : மகளிர் தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து

திங்கள் , மார்ச் 07,2016, சர்வதேச மகளிர் தினம், நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அனைத்து மகளிர்க்கும் தமது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மகளிர் மேம்பாட்டில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கி வருவதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இதற்காக அரசு செயல்படுத்திவரும் பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டுள்ளார். அறிவின் உருவாய், ஆற்றலின் வடிவமாய், தாய்மைக்கு இலக்கணமாய் திகழும் பெண்கள், தன்னம்பிக்கையுடனும், விடா முயற்சியுடனும், வாழ்வில் சந்திக்கும் சோதனைகளை உறுதியுடன் எதிர்கொண்டு அவற்றை வெற்றிப்படிகளாக்கி,