109 புதிய பேருந்துகள், 40 புதிய சிற்றுந்துகள் ஆகியவற்றை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார்

109 புதிய பேருந்துகள், 40 புதிய சிற்றுந்துகள் ஆகியவற்றை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார்

செவ்வாய், மார்ச் 01,2016, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, 29 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 109 புதிய பேருந்துகள், 40 புதிய சிற்றுந்துகள் ஆகியவற்றை, தலைமைச் செயலகத்தில் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 2 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 பணிமனைகளை திறந்து வைத்தார். சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் 9 பேருந்துகள், சென்னை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 12

அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் மற்றும் அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார்

அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் மற்றும் அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார்

செவ்வாய், மார்ச் 01,2016, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, இன்று தலைமைச் செயலகத்தில், 10 கோடி ரூபாய் செலவில் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் மற்றும் அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டம் ஆகிய திட்டங்களை காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார். மேலும், 207 கோடியே 37 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவத் துறை கட்டடங்களை திறந்து வைத்து, 21 கோடியே 11

குறைந்த கட்டணத்தில் இணைய சேவை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடக்கிவைத்தார்

குறைந்த கட்டணத்தில் இணைய சேவை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடக்கிவைத்தார்

செவ்வாய், மார்ச் 01,2016, குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் இணைய சேவை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடக்கிவைத்தார். அரசு கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக மாநிலம் முழுவதும் அதிகவேக அகண்ட அலைவரிசை சேவைகள் (Broadband Services)  மற்றும் இதர இணைய சேவைகள் (Internet Services) குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் அறிவித்தார். அதன்படி குறைந்த கட்டணத்தில் இணைய

சுற்றுப்புற காற்று மாசு கண்காணிக்கும் வாகன சேவையை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்

சுற்றுப்புற காற்று மாசு கண்காணிக்கும் வாகன சேவையை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்

செவ்வாய், மார்ச் 01,2016, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, இன்று தலைமைச் செயலகத்தில், சென்னை மாநகரின் சுற்றுப்புற காற்று மாசின் அளவினை தொடர்ந்து கண்காணிக்க, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில், ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் செலவிலான நடமாடும் தொடர் சுற்றுப்புற காற்று மாசு கண்காணிக்கும் நிலைய வாகனத்தின் சேவையினை கொடியசைத்து துவக்கி வைத்தார். நடமாடும் காற்று கண்காணிப்பு நிலையத்தின் மூலம் சுற்றுப்புற காற்றில் கலந்துள்ள சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, அமோனியா, ஒசோன்,

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி மதுரை மாவட்டத்தில் 10,000 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற பிரம்மாண்ட விளையாட்டுத் திருவிழா!

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி மதுரை மாவட்டத்தில் 10,000 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற பிரம்மாண்ட விளையாட்டுத் திருவிழா!

செவ்வாய், மார்ச் 01,2016, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, மதுரை மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற பிரம்மாண்ட விளையாட்டுத் திருவிழா நடைபெற்றது. குத்துச்சண்டை, கிரிக்கெட், வாள்சாண்டை உள்ளிட்ட போட்டிகள் ஒரே திடலில் நடைபெற்றது, அனைத்து தரப்பினரையும் வியக்க வைத்தது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், முதலமைச்சர் ஜெயலலிதா, விளையாட்டுத் துறைக்கு பல்வேறு சிறப்புத் திட்டங்கள், வீரர்-வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை, புதிய விளையாட்டு அரங்கங்கள் என எண்ணற்ற திட்டங்களைச்

5 ஆண்டுகளில் ரூ.91,210 கோடிக்கு புதிய முதலீடுகள் பெறப்பட்டுள்ளது: அமைச்சர் ப.மோகன் தகவல்

5 ஆண்டுகளில் ரூ.91,210 கோடிக்கு புதிய முதலீடுகள் பெறப்பட்டுள்ளது: அமைச்சர் ப.மோகன் தகவல்

செவ்வாய், மார்ச் 01,2016, தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையில் 5 ஆண்டுகளில் ரூ.91,210 கோடிக்கு புதிய முதலீடுகள் பெறப்பட்டுள்ளது என தொழிலாளர் நலன், பால் வளத்துறை அமைச்சர் ப.மோகன் தெரிவித்தார். மழை- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடனுதவி, அரசு மானியம் வழங்கும் விழா சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், உதவிகளை வழங்கி, மோகன் பேசியதாவது: சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு, பல்வேறு நலத் திட்டங்களை

முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க,20,000 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு விரைவில் கைபேசிகள் வழங்க ஏற்பாடு!

முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க,20,000 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு விரைவில் கைபேசிகள் வழங்க ஏற்பாடு!

செவ்வாய், மார்ச் 01,2016, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணைக்கிணங்க, தமிழகம் முழுவதும் உள்ள சமுதாய சுயஉதவிக்குழு பயிற்றுநர்களுக்கு கைபேசி வழங்குவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. விரைவில் 20 ஆயிரம் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு கைபேசிகள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், சமுதாய சுயஉதவிக்குழு பயிற்றுநர்களுக்கு, “அம்மா கைபேசிகள்” வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இத்திட்டத்தை கடந்த