மிஸ்டர் ஸ்டாலின்…. நீங்கள் செய்த இமாலய ஊழலை மன்னிப்பதா?’: நிர்மலா பெரியசாமி கேள்வி

மிஸ்டர் ஸ்டாலின்…. நீங்கள் செய்த இமாலய ஊழலை மன்னிப்பதா?’: நிர்மலா பெரியசாமி கேள்வி

வெள்ளி, பெப்ரவரி 26,2016, “ஸ்டாலின்,  ‘என்னை மன்னிச்சிடுங்க…!’ என மன்னிப்பு கேட்டுக்கொண்டு அலைகிறார். மிஸ்டர் ஸ்டாலின்… எதை மன்னிப்பது. நீங்கள் செய்த இமாலய ஊழலை மன்னிப்பதா?” என்று அதிமுக தலைமை கழக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார். திருச்சி எடத்தெரு கீழப்புதூரில் திருச்சி ஏர்போர்ட் பகுதி கழகம் நேற்றிரவு நடைபெற்ற முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக தலைமை கழக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி, “இந்த கலைஞர் பாமகவை வளர்த்துவிட்டார். அம்மா

மூத்த குடிமக்களுக்கான இலவச பஸ் பாஸ் திட்டத்திற்கு அமோக வரவேற்பு; முதல்வர் ஜெயலலிதாவுக்கு மனதார பாராட்டு

மூத்த குடிமக்களுக்கான இலவச பஸ் பாஸ் திட்டத்திற்கு அமோக வரவேற்பு; முதல்வர் ஜெயலலிதாவுக்கு மனதார பாராட்டு

வெள்ளி, பெப்ரவரி 26,2016, மூத்த குடிமக்களுக்கான இலவச பஸ் பாஸ் திட்டம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. திட்டத்தை அமல்படுத்திய முதல்வர் ஜெயலலிதாவுக்கு மூத்த குடிமக்கள் மனதார பாராட்டு தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 18–ந்தேதி சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் சென்னை மாநகர போக்குவரத்துக்கழக பஸ்களில் பயணம் செய்ய இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். மாதம் 10 டோக்கன்கள் வழங்கப்படும். குளிர்சாதன பஸ்களை

இந்தியாவில் பாதுகாப்பான நகரம் சென்னை:முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரித்து வருவதாக ஆய்வில் தகவல்

இந்தியாவில் பாதுகாப்பான நகரம் சென்னை:முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரித்து வருவதாக ஆய்வில் தகவல்

வெள்ளி, பெப்ரவரி 26,2016, இந்தியாவில் உள்ள நகரங்களில் பாதுகாப்பான நகரம் சென்னை என்று மெர்சர் குளோபல் கன்சல்டன்சி நிறுவன நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளன. அதாவது, குறைந்த அளவிலான குற்ற நடவடிக்கைகள், மேம்பட்ட சட்ட ஒழுங்கு விதிமுறைகள் அடிப்படையில் சென்னை பாதுகாப்பான நகரம் என்று மெர்சரின் வாழ்நிலை தர நிலவரம் மீதான ஆய்வு தெரிவிக்கின்றது. இந்த ஆய்வுக்காக உலகம் முழுதும் 230 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. உலக அளவில் பாதுகாப்பான நகரமாக சென்னை 113-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரமும், வெள்ளி கொலுசும் அணிவிக்கப்பட்டது

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரமும், வெள்ளி கொலுசும் அணிவிக்கப்பட்டது

வெள்ளி, பெப்ரவரி 26,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை யொட்டி, அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவித்தும், ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் அ.இ.அ.தி.மு.க.வினர் உற்சாகமாகக் கொண்டாடினர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதனகோட்டை ஊராட்சியில் கழக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அமைச்சர் திரு. R. வைத்திலிங்கம், 2,500 ஏழை பெண்களுக்கு விலையில்லா புடவைகளையும், ஒரு குடும்பத்தினருக்கு கன்றுடன் கூடிய கறவை மாட்டையும் வழங்கினார். இதில், தஞ்சை

தமிழக மக்களின் எதிர்பார்ப்பை ரயில்வே பட்ஜெட் பூர்த்தி செய்யவில்லை: முதல்வர் ஜெயலலிதா கருத்து

தமிழக மக்களின் எதிர்பார்ப்பை ரயில்வே பட்ஜெட் பூர்த்தி செய்யவில்லை: முதல்வர் ஜெயலலிதா கருத்து

வெள்ளி, பெப்ரவரி 26,2016, ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது என்று முதலமைச்சர் ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இந்த பட்ஜெட் தவறிவிட்டதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனினும் டெல்லி-சென்னை இடையே தனி சரக்கு ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை முதலமைச்சர் வரவேற்றுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ரயில்வே மூலதன செலவினம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தபட்டு

“உங்கள் சொந்த இல்லம்” திட்டம்: ரூ. 460 கோடியில் சீருடை பணியாளர்களுக்காக 2673 வீடுகள் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

“உங்கள் சொந்த இல்லம்” திட்டம்: ரூ. 460 கோடியில் சீருடை பணியாளர்களுக்காக 2673 வீடுகள் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

வெள்ளி, பெப்ரவரி 26,2016, காஞ்சிபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூரில் “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் சீருடைப் பணியாளர்களுக்காக 459 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2673 வீடுகளை தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்து, அவ்வீடுகளை வழங்கிடும் அடையாளமாக 14 சீருடைப் பணியாளர்கள் குடும்பத்தினருக்கு வீடுகளுக்கான சாவிகளை வழங்கினார்கள்.  இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:- மக்கள் நலன் காக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களின்