வியாழன் , பெப்ரவரி 04,2016, காங்கிரஸ், பாரதிய ஜனதா, புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். கேரளாவில் 50 ஆயிரம் சுய உதவிக்குழு உறுப்பினர்களை கொண்டு இயங்கும் ஜனசேவா கேந்திர நிறுவனரும் கழகத்தில் சேர்ந்தார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவை இன்று, சிவகங்கை மாவட்டம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோட்டையூர் பேரூராட்சி மன்றத் தலைவர் திரு
மழையால் பாதிக்கப்பட்ட சிறு-குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு விரைந்து கடன் வழங்கிட வங்கி அதிகாரிகளுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்
வியாழன் , பெப்ரவரி 04,2016, முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த, சிறப்புத் திட்டத்தின்கீழ் விண்ணப்பித்த மழையால் பாதிக்கப்பட்ட சிறு-குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு விரைந்து கடன் வழங்கிட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வங்கியாளர்களை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்குதல் குறித்த வங்கியாளர்களுடனான, கலந்துரையாடல் கூட்டம் சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை சிட்கோ தலைமை
முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர நடவடிக்கையால் தமிழகம் எதிர்காலத்தில் புற்றுநோய் இல்லாத மாநிலமாக திகழும்
வியாழன் , பெப்ரவரி 04,2016, முதலமைச்சர் ஜெயலலிதா, மேற்கொண்டு வரும் நடவடிக்கையின் காரணமாக, புற்றுநோயிலிருந்து ஏராளமானோர் குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 7 லட்சம் பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் மற்றும் ஒருகோடியே 30 லட்சம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா, ஏழை, எளிய மக்களும் உயர்தர சிகிச்சை பெறும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். உலக புற்றுநோய் தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், முதலமைச்சரின் ஆணைப்படி, சென்னை அரசு பொதுமருத்துவமனையில்,
விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்க கெய்ல் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
வியாழன் , பெப்ரவரி 04,2016, தமிழகத்தில் விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை கொண்டு செல்லும் கெயில் நிறுவனத்தின் திட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளதற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்செய்ய தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார். தமிழகத்தில் விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை கொண்டு செல்லும் கெயில் நிறுவனத்தின் திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த திட்டத்தை தமிழகம் வழியாக செயல்படுத்த
கெயில் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சீராய்வு மனுத் தாக்கல் செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
அறிவியலிலும் அரசியல் செய்யும் ஸ்டாலின் :திமுகவை விளாசும் விவசாயிகள்!
வியாழக்கிழமை, பிப்ரவரி 04, 2016, நமக்கு நாமே பயணத்தின்போது தஞ்சாவூர் அருகே அரசூரில் உள்ள ஒரு வயலில் இறங்கி நெல் நாற்றினை நடவு செய்தார் ஸ்டாலின். தற்போது அந்த வயலில் அறுவடை நடைபெற்ற நிலையில்,..ஸ்டாலின் கைராசியால் வழக்கத்தைவிட அதிக மகசூல் கிடைத்திருக்கிறது’ என்று பிரசாரம் செய்து வருகின்றனர் தஞ்சாவூர் மாவட்ட தி.மு.க நிர்வாகிகள். ஊரில் சில விவசாயிகளிடம் இதைப் பற்றி விசாரித்தோம். போன வருஷம் ஏக்கருக்கு 45 மூட்டை மகசூல் எடுத்தவர்தான். இந்த வருஷம் 40 மூட்டை
முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கையால், தூய்மையில் நம்பர் 1 மாநிலமாக மாறிவரும் தமிழகம்
வியாழக்கிழமை, பிப்ரவரி 04, 2016, தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நீர்நிலைகளை சீரமைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்தல், சூரிய மின்சக்தி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக போதுமான அளவு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுவதாக தமிழக சுற்றுச்சூழல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது தற்போது உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், அதனை முழுமையாக பாதுகாப்பதில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு
அழகிரி பிறந்தநாளையொட்டி, 8 மணி நேரம் காக்க வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்காமல் ஏமாற்றிய துரைதயாநிதிக்கு பொதுமக்கள் கடும் கண்டனம்
வியாழக்கிழமை, பிப்ரவரி 04, 2016, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரியின் பிறந்தநாளையொட்டி, அவரது மகன் துரைதயாநிதி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், நலத்திட்ட உதவிகள் வழங்காமல் பொதுமக்களை பல மணி நேரம் அழைக்களித்து, ஏமாற்றிய சம்பவம் தேனி மாவட்ட மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வயதான மூதாட்டிகள் உள்ளிட்ட பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்ததால், ஆத்திரமடைந்த போடிநாயக்கனூர் மக்கள், அழகிரி மற்றும் அவரது மகனின் அநாகரீக செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தி.மு.க. தலைவர்
முதலமைச்சர் ஜெயலலிதாவின் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் முன்னோடித் திட்டம் 100 சதவீத இலக்கை அடைந்து சாதனை!
வியாழக்கிழமை, பிப்ரவரி 04, 2016, இந்தியாவிலேயே முதன்முறையாக, முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்த, முன்னோடித் திட்டங்களில் ஒன்றான, மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டம், நூறு சதவீத இலக்கினை அடைந்து நிறைவு பெற்று சாதனை படைக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது. முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா, நாட்டிலேயே முதல்முறையாக மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் முன்னோடித் திட்டத்தை கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கி வைத்தார். இந்தியா மட்டுமல்லாமல், உலக அளவிலும் கல்வித்துறையினர் மட்டுமல்லாமல் பல்வேறு துறையினராலும் மிகப்பெரிய பாராட்டுதல்
உற்சாகத்தில் அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள்:முதலமைச்சர் ஜெயலலிதா தங்கள் தொகுதியில் போட்டியிட இன்றும் ஆயிரக்கணக்கானோர் மனு
வியாழக்கிழமை, பிப்ரவரி 04, 2016, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள அ.இ.அ.தி.மு.க.வினருக்கான விருப்ப மனுக்கள் தொடர்ந்து இன்றும் தலைமைக்கழகத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தொண்டர்களின் எழுச்சியை போற்றும் விதமாக நேற்று நிறைவடைந்த விண்ணப்ப விநியோகத்தை இன்றுமுதல் 3 தினங்களுக்கு நீட்டித்து, முதலமைச்சரும், கழகப் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால், தொண்டர்கள் கூடுதல் உற்சாகம் அடைந்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட விரும்பும் அ.இ.அ.தி.மு.க.வினருக்கான விருப்பமனு விநியோகம் முதலமைச்சரும்