கருணை உள்ளம் படைத்தவர் முதல்வர் ஜெயலலிதா:நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெருமிதம்

கருணை உள்ளம் படைத்தவர் முதல்வர் ஜெயலலிதா:நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெருமிதம்

ஞாயிறு, ஜனவரி 03,2016, சென்னை : மக்கள் நலன் அறிந்து கேட்காமலேயே கொடுக்கின்ற முதல்வர் ஜெயலலிதா மட்டும் தான் என்று செய்தி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர்கே.டி.ராஜேந்திரபாலாஜி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அணில் திருமண மண்டபத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்.சி.முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 167நபர்களுக்கு ரூ.1 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பில் இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகைபெறுவதற்கான ஆணைகளையும்,

பாம்பு கடித்து இறந்தவர் குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.3 லட்சம் நிதி உதவி

பாம்பு கடித்து இறந்தவர் குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.3 லட்சம் நிதி உதவி

ஞாயிறு, ஜனவரி 03,2016, சென்னை : திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் பாம்பு கடித்து இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு:- திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், திருநின்றவூர் கிராமம், அன்னை இந்திரா நகரைச் சேர்ந்த முரளி என்வரின் மகன் கார்த்திக் என்பவர் பாம்பு கடித்ததில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 31.12.2015 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்த நான்

வெள்ளம் பாதித்த பகுதிகளில் மறுசீரமைப்பு பணியை தமிழக அரசு விரைவாக மேற்கொண்டு வருவதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பாராட்டு

வெள்ளம் பாதித்த பகுதிகளில் மறுசீரமைப்பு பணியை தமிழக அரசு விரைவாக மேற்கொண்டு வருவதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பாராட்டு

ஞாயிறு, ஜனவரி 03,2016, சென்னை : மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சிறப்பான நிவாரண உதவிகளை செய்து வருவதாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மழை வெள்ளத்தால் குடிசைகளை இழந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கட்ட மொத்தம் 5,750 கோடி ரூபாய் வழங்கவேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே பிரதமரிடம் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி செல்லும் வழியில், சென்னை விமான

இலங்கை சிறைகளில் உள்ள 84 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம்

இலங்கை சிறைகளில் உள்ள 84 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம்

ஞாயிறு, ஜனவரி 03,2016, இலங்கை சிறைகளில் உள்ள 84 தமிழக மீனவர்கள் மற்றும் 62 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச் சர் ஜெயலலிதா எழுதி யுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- புத்தாண்டு தினத்தன்றும் இலங்கை கடற்படை வீரர்கள் தமிழக மீனவர்களை பிடித்துச் சென்ற துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை உங்கள் கவனத் துக்கு கொண்டு வர இந்த கடிதத்தை எழுதுகிறேன். நாகை

ஜல்லிக்கட்டு நடத்த தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நன்றி

ஜல்லிக்கட்டு  நடத்த தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நன்றி

சனி, ஜனவரி 02,2016, ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதற்கு மத்திய அமைச்சர் திரு. பொன் ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார். பாரம்பரிய விளையாட்டுக்கு எதிரான சட்ட சிக்கல்களை நீக்கி உறுதியான உத்தரவு பிறப்பிக்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டுவரவதாகவும் அவர் கூறினார். 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதியன்று, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், காட்சிப் பொருளாக பயன்படுத்தக்கூடாத பிராணிகள் பட்டியலில் காளை மாடுகளை சேர்த்து, ஓர் அறிவிக்கை

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி,விலையில்லா பாடப் புத்தகங்கள் விநியோகம்:மாணவ, மாணவியர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி,விலையில்லா பாடப் புத்தகங்கள் விநியோகம்:மாணவ, மாணவியர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி

சனி, ஜனவரி 02,2016, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்குப் பின்னர், பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளான இன்றே முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு 3-ம் பருவத்திற்கான பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பள்ளி மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைத்து, அவர்கள் கல்வி பயில வசதியாக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, ஒன்று முதல் 9ஆம் வகுப்புவரை முப்பருவக் கல்வி முறையினை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த

தமிழகம் முழுவதும் விலையில்லா வேட்டி-சேலைகள் விநியோகம் தொடக்கம் :பயனாளிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி

தமிழகம் முழுவதும் விலையில்லா வேட்டி-சேலைகள் விநியோகம் தொடக்கம் :பயனாளிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி

சனி, ஜனவரி 02,2016, தமிழகத்தில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஏழை-எளிய மக்களுக்கு, விலையில்லா வேட்டி-சேலைகள் வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே தொடங்கி வைத்துள்ள நிலையில், முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, தமிழகம் முழுவதும் பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி-சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு அளிக்கவும், அதன்மூலம் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திடவும், 1983-ம் ஆண்டு, அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது – கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில்,

தரச் சான்று பெற்ற ‘அம்மா சீட்ஸ்’ விதைகள் விநியோக திட்டம்முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்து,வீட்டு மாடிகளில் காய்கறி வளர்க்கும் “நீங்களே செய்து பாருங்கள்” தளைகளையும் வழங்கினார்

தரச் சான்று பெற்ற ‘அம்மா சீட்ஸ்’ விதைகள் விநியோக திட்டம்முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்து,வீட்டு மாடிகளில் காய்கறி வளர்க்கும் “நீங்களே செய்து பாருங்கள்” தளைகளையும் வழங்கினார்

சனி, ஜனவரி 02,2016, முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில், வேளாண்மைத் துறை சார்பில் விருதுநகர் மாவட்டம் – அருப்புக்கோட்டையில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில், 11,322 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள உழவர் மையத்தை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும், சுமார் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நவீன சேமிப்புக் கிடங்குகள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், உழவர் மையங்கள் உள்ளிட்டவற்றை திறந்து வைத்ததுடன், சான்றுபெற்ற விதைகள் விநியோகத் திட்டத்தை துவக்கி வைத்தார். அத்துடன், திருச்சி,

நாகூர் தர்கா குளம் தூர்வாரப்பட்டு, பக்தர்களின் பயன்பாட்டுக்கு திறப்பு : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மக்கள் நன்றி

நாகூர் தர்கா குளம் தூர்வாரப்பட்டு, பக்தர்களின் பயன்பாட்டுக்கு திறப்பு : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மக்கள் நன்றி

வெள்ளி, ஜனவரி 01,2016, நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற நாகூர் தர்கா குளம் தூர்வாரப்பட்டு, பக்தர்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டிருப்பதையடுத்து, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். நாகூரில் அமைந்திருக்கும் தர்கா, உலகப் புகழ் பெற்றதாகும். தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மொழி, மதம் கடந்து ஏராளமானோர் இந்த தர்காவிற்கு வருகை தருகின்றனர். இத்தகைய சிறப்பு பெற்ற தர்காவின் பின்புறத்தில் அமைந்துள்ள குளம், கடந்த பல வருடங்களாக தூர் வாரப்படாமல் மிகவும் சீர்கேடு

வேலூர் மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்திய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாநகராட்சி கூட்டத்தில் பாராட்டு

வேலூர் மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்திய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாநகராட்சி கூட்டத்தில் பாராட்டு

வெள்ளி, ஜனவரி 01,2016, வேலூர் மாவட்ட மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கும் வகையில், ஆயிரத்து 295 கோடி ரூபாய் செலவில் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்திய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாநகராட்சி கூட்டத்தில் நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. வேலூர் மாநகராட்சி மன்றக் கூட்டம், மேயர் திருமதி கார்த்தியாயிணி தலைமையில் நடைபெற்றது. இதில், மன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய மேயர், வேலூர் மாவட்ட மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி ஆண்டு முழுவதும் வழங்கும் வகையில் ஆயிரத்து