திங்கட்கிழமை, பிப்ரவரி 27, 2017, சென்னை : ”தீபா யாரென்று எனக்கு தெரியாது,” என லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார். சில தினங்களுக்கு முன் நிருபர்களிடம் பேசுகையில், ‘தீபக்கா யாரது, அ.தி.மு.க.,வில் இருக்கிறாரா… எனக்கு அவரை பற்றி தெரியாது’ என தம்பிதுரை கூறியிருந்தார். இந்நிலையில், நேற்று சென்னை விமான நிலையம் வந்த தம்பிதுரையிடம், ‘எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை’ என்ற, அரசியல் அமைப்பை, ஜெ., அண்ணன் மகள் தீபா துவக்கி உள்ளது குறித்து, நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு
தீபா, தீபக் இருவரும் யாரென்று எனக்கு தெரியாது : தம்பிதுரை
திருவாரூர் விவசாயிகளுக்கு வறட்சி நிதியாக ரூ. 179 கோடி ஒதுக்கீடு : உணவுத்துறை அமைச்சர் காமராஜ்
திங்கட்கிழமை, பிப்ரவரி 27, 2017, திருவாரூர் : திருவாரூரில் வறட்சி நிவாரண நிதியாக 179 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். நேற்று மன்னார்குடியில் இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசிய அவர், மருத்துவ காப்பீடு மூலம் அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சை தரப்படுகிறது என்றார். மருத்துவத்துறையில் வளர்ச்சியை ஏற்படுத்திய அரசு, மக்களின் தேவைகளை அறிந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதாக கூறினார். திருவாரூர் மாவட்ட விவசாயிகளுக்கு மட்டும் வறட்சி நிவாரண நிதியாக 179
மக்கள் தெய்வமாகப் போற்றும் அம்மாவை குறைசொல்ல ஸ்டாலினுக்கு எந்தத் தகுதியும் இல்லை : அ.தி.மு.க நிர்வாகிகள் பொதுமக்கள் கடும் கண்டனம்
திங்கட்கிழமை, பிப்ரவரி 27, 2017, குற்றவாளிகளையே கொண்டு தி.மு.க.வை நடத்தும் மு.க.ஸ்டாலின், தமிழர்கள் தெய்வமாகப் போற்றும் அம்மாவை குறைசொல்ல எந்தத் தகுதியும் இல்லை என அ.இ.அ.தி.மு.க நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழக மக்கள், தெய்வமாகப் போற்றும், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவை குறைசொல்ல, குற்றவாளிகளைக் கொண்டு தி.மு.க.வை நடத்தும் மு.க.ஸ்டாலினுக்கு எந்தத் தகுதியும் இல்லை என, அ.இ.அ.தி.மு.க நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.தி.மு.க.வினர் பற்றி நாட்டு மக்களுக்கும் நன்கு தெரியும் என்றும் கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மறைந்த
கடலில் தவறி விழுந்து பலியான 8 மீனவர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
திங்கட்கிழமை, பிப்ரவரி 27, 2017, சென்னை : மீன்பிடிக்க சென்று கடலில் தவறி விழுந்து இறந்த எட்டு மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 1 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி வெளியிட்ட அறிக்கை :- நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி வட்டம், திருமுல்லைவாசல் கிராமத்தைச்சேர்ந்த பாவாடை என்பவரின் மகன். சந்திரகாசன்;ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் வட்டம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த. பிச்சை என்பவரின் மகன். முனியசாமி;காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம்
பிரதமர் மோடியைச் சந்திப்பதற்காக டெல்லி சென்றடைந்தார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி
தமிழர்கள் தெய்வமாகப் போற்றும் அம்மாவை குறைசொல்ல ஸ்டாலினுக்கு எந்தத் தகுதியும் இல்லை : அ.தி.மு.க நிர்வாகிகள் பொதுமக்கள் கடும் கண்டனம்
மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்
ஞாயிறு, பிப்ரவரி 26, 2017, சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதா படத்தை, அரசு அலுவலகங்களில் இருந்து அகற்ற வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசியல் நாகரிகம் இல்லாமல், ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். மக்களைப் பற்றி சிந்தித்து, மக்களுக்காகவே வாழ்ந்தவர் ஜெயலலிதா. அவரை மக்களின் மனதில் இருந்து நீக்க முடியாது. ஜெயலலிதா மீது காழ்ப்புணர்ச்சியோடு விமர்சனம் செய்துள்ள துரதிர்ஷ்டவசமானது. இதற்கு என் கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். விமர்சிப்பதை
மு.க.ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் : டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்
ஞாயிறு, பிப்ரவரி 26, 2017, சென்னை : மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மீது அவதூறு பழி போட்ட மு.க. ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அ தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார். மு.க. ஸ்டாலினுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அ தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– திமுக-வின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் 24.2.2017 அன்று பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, கொலைக் குற்றவாளியான
மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது : பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்
ஞாயிறு, பிப்ரவரி 26, 2017, சென்னை ; காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு தொழில்நுட்ப அனுமதியை மத்திய அரசு வழங்கக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எழுதிய அந்தக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:- கர்நாடக அரசானது ரூ.5 ஆயிரத்து 912 கோடி செலவில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த