முதல்வர் ஜெயலலிதா குணமடைய கேதார்நாத் கோயிலில் இருந்து புனித தீர்த்தம் கொண்டு வந்தார் எம்.பி. தருண் விஜய்

முதல்வர் ஜெயலலிதா குணமடைய கேதார்நாத் கோயிலில் இருந்து புனித தீர்த்தம் கொண்டு வந்தார் எம்.பி. தருண் விஜய்

சென்னை : முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய12 ஜோதி லிங்கத் திருத்தலங்களில் ஒன்றான கேதார்நாத் சிவன் கோயிலில் இருந்து சிறப்பு பிரசாதம் கொண்டு வந்தார் பாஜக எம்.பி. தருண் விஜய். சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக பொதுசெயலாளரும் முதல்வருமான ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து அறிவதற்காக உத்தரகாண்ட்  மாநில பாஜ எம்.பி. தருண் விஜய் வந்தார். அப்போலோ மருத்துவமனையில் பாராளுமன்றத்துணைசபாநாயகர் தம்பிதுரையை சந்தித்த பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பாஜக எம்.பி. தருண்

உட்கார, நடக்க பயிற்சி செய்யும் முதல்வர் ஜெயலலிதா ; விரைவான முன்னேற்றம் கண்டு டாக்டர்கள் மகிழ்ச்சி

உட்கார, நடக்க பயிற்சி செய்யும் முதல்வர் ஜெயலலிதா ; விரைவான முன்னேற்றம் கண்டு டாக்டர்கள் மகிழ்ச்சி

ஞாயிறு, நவம்பர் 06,2016, முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுந்து உட்கார, நடக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிற நிலையில் அவரது உடல்நிலையில் விரைவான முன்னேற்றம் கண்டு டாக்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலகுறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி முதல் சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் பல்வேறு விதமான பிரார்த்தனைகள், பூஜைகள் செய்து

முதல்வர் ஜெயலிதாவின் சாதனைகளையும்,தி.மு.க.செய்த துரோகங்களையும் மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள் ; அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

முதல்வர் ஜெயலிதாவின் சாதனைகளையும்,தி.மு.க.செய்த துரோகங்களையும் மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள் ; அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

ஞாயிறு, நவம்பர் 06,2016, முதல்வர் ஜெயலிதாவின் வரலாற்று சாதனைகளையும் தி.மு.க. தமிழகத்திற்கு செய்த துரோகங்களையும் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு எடுத்து சொல்லி தொகுதியில் உள்ள 291 வாக்குச்சாவடிகளிலும் அமோக வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று அமைச்சர்ஓ .பன்னீர்செல்வம் கூறினார். திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் 291 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. இந்த வாக்குச்சாவடி முகவர்களின் ஆலோசனைக் கூட்டம் சிந்தாமணியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம் ஒன்றியம், அவனியாபுரம் பகுதி, திருப்பரங்குன்றம் பகுதி

முதல்வர் ஜெயலலிதா இன்னும் பத்து நாட்களில் வீடு திரும்புவார் : மதுரை ஆதினம்

முதல்வர் ஜெயலலிதா இன்னும் பத்து நாட்களில் வீடு திரும்புவார் : மதுரை ஆதினம்

சனி, நவம்பர் 05,2016,  சென்னை : தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்னும் பத்து நாட்களில் வீடு திரும்புவார் என்று மதுரை ஆதினம் தெரிவித்தார். தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு அப்பல்லோ மருத்துவர்களுடன் தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் லண்டன் சிங்கப்பூர் மருத்துவர்களும் சிகிச்சை அளிந்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவி உடல்நிலை குறித்த விசாரிக்க மதுரை ஆதினம் இன்று அப்போலோவுக்கு சென்றார்.

முதல்வர் ஜெயலலிதாவின் முன்னோடித் திட்டங்களால், அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடம் : இந்தியா டுடே விருது வழங்கி கவுரவிப்பு

முதல்வர் ஜெயலலிதாவின் முன்னோடித் திட்டங்களால், அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடம் : இந்தியா டுடே விருது வழங்கி கவுரவிப்பு

சனி, நவம்பர் 05,2016, சென்னை  – முதலமைச்சர்  ஜெயலலிதாவின் முன்னோடித் திட்டங்களால், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் நாட்டிலேயே மிக முன்னேறிய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்து சாதனைபடைத்துள்ளதற்காக இந்தியா டுடே விருது வழங்கி கவுரவித்துள்ளது.  “மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்ற உயரிய நோக்கத்துடன், முதலமைச்சர்  ஜெயலலிதா, கல்வி, வேளாண், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நாட்டிற்கு முன்னோடியான எண்ணற்றத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முதலமைச்சரின் இத்தயை சீர்மிகு திட்டங்களால், நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம்

நதிநீர் பிரச்சனைகளில் முதல்வர் ஜெயலலிதா சிறப்பாக செயல்பட்டு வருகிறார் ; வைகோ பாராட்டு

நதிநீர் பிரச்சனைகளில் முதல்வர் ஜெயலலிதா சிறப்பாக செயல்பட்டு வருகிறார் ; வைகோ பாராட்டு

சனி, நவம்பர் 05,2016, நதிநீர் விவகாரங்களில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை முறையாக மேற்கொண்டு தமிழக நலன்களை பாதுகாத்து கொடுத்தவர் முதலமைச்சர் ஜெயலலிதா என திரு.வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு இன்று  பேட்டியளித்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, காவிரி நதிநீர் பிரச்னையில் கர்நாடகா தொடர்ந்து வஞ்சகம் செய்து வருவதாகக் குற்றம்சாட்டினார். சட்ட ரீதியாக தமிழக நதிநீர் விவகாரங்களில் முறையாக நடவடிக்கை எடுத்தவர் முதலமைச்சர் ஜெயலலிதா என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.