சனி, நவம்பர் 05,2016, அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகள், திட்டங்கள் ஆகியவற்றை குறும்படமாக தயாரித்து அதை பொது மக்களுக்கு ‘டேப்’ மூலம் காண்பித்து வீடு வீடாக ஓட்டு கேட்டு வருகின்றனர். தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் அ.தி. மு.க.வினர் கடந்த 3 நாட்களாக முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். 3 தொகுதிகளிலும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் அ.தி. மு.க.வினர் வீடு
திருப்பரங்குன்றத்தில், ஏ.கே.போசை ஆதரித்து ஓ.பன்னீர் செல்வம் வாக்கு சேகரிப்பு
சனி, நவம்பர் 05,2016, திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போசை ஆதரித்து அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் மதுரை மாநகராட்சி 96வது வார்டு திருப்பரங்குன்றம் பகுதியில் வீதிவீதியாக திறந்த ஜீப்பில் சென்று வாக்குகளை சேகரித்தனர்.தமிழக மக்களுக்கு என்ன தேவையோ அதை அறிந்து 100 சதவீதம் நிறைவேற்றும் ஒரே தலைவர் முதல்வர் ஜெயலலிதா என்று அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பிரச்சாரத்தின் போது கூறினார். திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போசை ஆதரித்து அமைச்சர்கள் மற்றும்
திருப்பரங்குன்றத்தில், ஏ.கே.போசை ஆதரித்து ஓ.பன்னீர் செல்வம் வாக்கு சேகரிப்பு
முதல்வருடைய நல்ல மனசுக்கு, அவருக்கு எதுவும் ஆகாது – அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்’’ ; விஜயசாந்தி
சனி, நவம்பர் 05,2016, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரிக்க நேற்று நடிகை விஜயசாந்தி மருத்துவமனைக்கு வந்தார். பின்னர் வெளியில் வந்த விஜயசாந்தி, செய்தியாளர்களிடம் கூறும்போது; மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன். முதல்வர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும், பயப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்தனர் என்றும் ,‘‘முதல்வருடைய நல்ல மனசுக்கு, அவருக்கு எதுவும் ஆகாது. அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்’’ என்றும் விஜயசாந்தி கூறினார். மேலும், முதல்வர் உடல் நலம் பற்றிய செய்திகளை உடனுக்குடன்
மலேசிய தமிழர்களும் முதல்வர் ஜெயலலிதா குணம் அடைய பிரார்த்தனை ; மலேசிய மந்திரி கமலநாதன் தகவல்
வெள்ளி, நவம்பர் 04,2016, சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க தினமும் அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில்,மலேசிய உயர் கல்வித்துறை துணை மந்திரி கமலநாதன்,நக்மா, தேசிய தொண்டர் காங்கிரஸ் கட்சி தலைவர் போடி சதாசிவம் உள்பட பலர் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரித்து சென்றனர். முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரித்த பின் மலேசிய நாட்டு உயர் கல்வித்துறை
நோயிலிருந்து முழுமையாக மீண்டு விட்டார் முதல்வர் ஜெயலலிதா : அப்போலோ மருத்துவமனை தலைவர் பேட்டி
வெள்ளி, நவம்பர் 04,2016, முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை யில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் முழுமையாக குணமடைந்துவிட்டார். விரைவில் வீடு திரும்பி பணிகளை தொடருவார் என்று அப்போலோ மருத்துவமனைகள் குழுமத் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி கூறினார். முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சை நிபுணர் ஜி.கிலானி,
நோயிலிருந்து முழுமையாக மீண்டு விட்டார் முதல்வர் ஜெயலலிதா : அப்போலோ மருத்துவமனை தலைவர் பேட்டி
நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு என்.ஆர்.காங்.மற்றும் பாஜக ஆதரவு
வெள்ளி, நவம்பர் 04,2016, நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு முக்கிய எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக ஆதரவு அளித்துள்ளன. புதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் நாராயணசாமி, அதிமுக சார்பில் ஓம்சக்தி சேகர் போட்டி யிடுகின்றனர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக திமுக, விடுதலை சிறுத்தைகள் ஆதரவு தெரிவித்து தேர்தல் பணியாற்றி வருகின்றன. அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர் தங்கள் கட்சியினருடன் வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில், என்.ஆர்.காங்
விளையாட்டு வீரர்களுக்கு பல உதவிகளை செய்த முதல்வர் ஜெயலலிதா,பல கோடி மக்களின் பிரார்த்தனையால் விரைவில் குணம் அடைவார் ; குற்றாலீஸ்வரன்
வெள்ளி, நவம்பர் 04,2016, சென்னை : முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணம் அடைந்து வீடு திரும்புவார் என்று நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரன் தெரிவித்தார். முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்கு நேற்று அப்பல்லோ மருத்துவமனைக்கு நீச்சல் வீரர் குற்றாலீசுவரன் உள்பட பலர் வந்து சென்றனர். மருத்துவமனைக்கு வெளியே வந்த குற்றாலீசுவரன் நிருபர்களிடம் கூறியதாவது:- முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தேன். இங்கு பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையை சந்தித்து பேசினேன். அவர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை