Karaikudi
MLA Mr. Cholan CT. Palanichamy
Father Name | Chithambaram |
Party | AIADMK |
Date of Birth | 05th May 1963 |
Place of Birth | Cholangadu |
Marital Status | Married |
Address | Chennai: B5D, MLAs Quarters, Omanthurar Government Estate, Chennai-600 002. |
Mofussil: Cholankadu, Peerkalaikadu Post, Puduvayal Via, Karaikudi-630 108. | |
Telephone | 044-25368420 |
Mobile: 91 9443127006; 99439 75556 | |
mlakaraikudi@tn.gov.in | |
https://www.facebook.com/cholan.palanichamymla |
Karaikudi (State Assembly Constituency)
Karaikudi is a state assembly constituency in Tamil Nadu.
Total Voters:
Male: 1,40,223
Female: 1,42,228
Transgender: 9
Total: 2,82,460
கண்ணங்குடி ஒன்றிய கிராமங்களில் காரைக்குடி அதிமுக வேட்பாளர் பிரசாரம்
மே 12,2016,
காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதி கண்ணங்குடி ஒன்றியக் கிராமங்களில் அதிமுக வேட்பாளர் கற்பகம் இளங்கோ புதன்கிழமை வாக்கு சேகரித்துப் பிரசாரம் மேற்கொண்டார்.
கண்ணங்குடி ஒன்றியத்தில் உள்ள நரசிங்கபுரம் கிராமத்தில் அவர் பிரசாரத்தை தொடங்கினார். அதைத்தொடர்ந்து கள்ளிவயல், குசவன்தானிவயல், ஊரவயல், பணங்காட்டான்வயல், பாப்பன் வயல், மொட்டையன்வயல், பெரிய உஞ்சனை, சின்ன உஞ்சனை, மங்களம், வெங்களூர், பாப்பாகுடி, கொடிக்குளம், சாத்தமங்களம், குடிக்காடு, கொல்லங்குடி, தேர்போகி, சித்தானூர் உள்ளிட்ட 65 கிராமங்களில் வாக்குகள் சேகரித்தார்.
பிரசாரத்தில் வேட்பாளருடன் அதிமுக மாவட்டச்செயலாளர் பிஆர்.செந்தில்நாதன் எம்.பி, காரைக் குடித்தொகுதி அதிமுக செயலாளர் கே.கே. சொர்ணலிங்கம், வழக்குரைஞர் ராமநாதன், மாவட்ட அதிமுக இளைஞரணி நிர்வாகி தேர்போகி பாண்டி, கண்ணங்குடி ஒன்றிய அதிமுக செயலாளர் பெரியசாமி உள்ளிட்ட அதிமுகவினர் உடன் சென்று வாக்குகள் சேகரித்தனர்.
64 கிராமங்களில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
மே 11,2016,
காரைக்குடி தொகுதி தேவகோட்டை ஒன்றியத்தில் 64 கிராமங்களில் அதிமுக வேட்பாளர் கற்பகம் இளங்கோ செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்து பிரசாரம் மேற்கொண்டார்.
தேவகோட்டை ஒன்றியத்தில் புளியால், திடக்கோட்டை, மனைவிக்கோட்டை, தளக்காவயல், மாவிடுதிக்கோட்டை, சக்கந்தி, பனங்குளம் உள்ளிட்ட ஊராட்சிகளில் அதிமுக வேட்பாளர் கற்பகம் இளங்கோ வாக்கு சேகரித்தார். சிவந்தான்கோட்டை கிராமத்தில் பிரசாரத்தை தொடங்கிய இவர், புளியால், பருத்தியூர், கிடுகட்டி, செட்டியேந்தல், புலிகுளம், இருமதி, சக்கந்தி, வாரியன்வயல் உள்ளிட்ட 64 கிராமங்களில் வாக்கு சேகரித்தார். பெண்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
அப்போது, வேட்பாளர் கற்பகம் இளங்கோ பேசுகையில், தமிழகத்தில் அதிமுக ஆட்சி மீண்டும் மலரும். கிராமங்களில் பெண்களுக்கும், மாணவர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் தொடரும். விவசாயிகளின் கவலை தீர விவசாயக் கடனையும், கூட்டுறவுக் கடனையும் ரத்து செய்வதாக, தமிழக முதல்வர் தேர்தல் அறிக்கையில் அறிவித்திருக்கிறார். இப்பகுதியில் உள்ள பிரச்னைகளை கட்டாயம் தீர்ப்பேன். எனவே, அனைவரும் அதிமுகவுக்கு ஆதரவு தரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். சிவகங்கை எம்.பி. பிஆர். செந்தில்நாதன், அதிமுக ஒன்றியப் தலைவர் சௌந்தரம் பிர்லா கணேசன், வழக்குரைஞர் ராமநாதன் மற்றும் அக்கட்சியினர் பலர் வேட்பாளருடன் சென்று வாக்குகள் சேகரித்தனர்.
காரைக்குடி அதிமுக வேட்பாளர் தேவகோட்டை ஒன்றியத்தில் வாக்கு சேகரிப்பு
மே 10,2016,
காரைக்குடி சட்டப்பேரவைத்தொகுதி தேவகோட்டை ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் அதிமுக வேட்பாளர் கற்பகம் இளங்கோ திங்கள்கிழமை வாக்கு சேகரித்துப் பிரசாரம் செய்தார்.
சுண்டூரணி ஊராட்சியில் பிரசாரத்தைத் தொடங்கி கீழஉச்சாணி,என்.மணக்குடி, மினிட்டாங்குடி, கடம்பாகுடி, ஆலன்வயல், கட்டனூர், மணக்குடி, பாப்பாகுடி, காவதுகுடி, திருவேகம்பத்தூர்,வெட்டிவயல், கிளியூர், கடையனேந்தல், மருத வயல் உள்ளிட்ட ஊராட்சிகளிலுள்ள கிராமங்களில் கற்பகம் இளங்கோ வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், கிராமங்களின் நலனில் அக்கறைகொண்டுதான் தமிழகமுதல்வர் அதிமுக தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளார். விவசாயக்கடன், கூட்டுறவு சங்கக் கடனை ரத்துசெய்வதாக வாக்குறுதி தந்திருக்கிறார். இப்பகுதி வளர்ச்சியடையவேண்டும். அதிமுக அரசு மீண்டும் ஆட்சியில் அமர எனக்கு வாக்களித்து வெற்றிபெறச்செய்யுங்கள் என்றார்.
வேட்பாளருடன் ஒன்றியத்தலைவர் சௌந்தரம் பிர்லாகணேசன், வழக்குரைஞர் ராமநாதன் மற்றும் அதிமுக கிளை நிர்வாகிகள் ஆகியோர் உடன் சென்று வாக்குகள் சேகரித்தனர்.
காரைக்குடி நகரில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
மே 8,2016,
காரைக்குடி நகரில் அதிமுக வேட்பாளர் கற்பகம் இளங்கோ சனிக்கிழமை வாக்கு சேகரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.
காரைக்குடி நகரிலுள்ள கொப்புடைய நாயகியம்மன் கோயில் பகுதியில் வாக்குகள் சேகரித்து தனது பிரசாரத்தைத் தொடங்கிய வேட்பாளர் கற்பகம் இளங்கோ, காரைக்குடி அதிமுக ஆட்சியில்தான் பல்வேறு வளர்ச்சிகளை கண்டது.
காரைக்குடியின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சம்பை ஊற்றை பாதுகாக்க, அப்பகுதி சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், காரைக்குடி நகராட்சி அதிமுக ஆட்சியில்தான் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. எனவே, இந்த ஆட்சி மேலும் தொடர அதிமுகவுக்கு ஆதரவளியுங்கள் என்றார்.
தொடர்ந்து அவர், ஐந்துவிளக்குப் பகுதி எம்.ஜி.ஆர். சிலை, சத்தியன் திரையரங்கம் பகுதி, செஞ்சை பெருமாள் கோயில், முத்துராமலிங்கத் தேவர் நகர், சத்யா நகர், தெற்கு தெரு பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது வேட்பாளருடன், காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் சோழன் சித. பழனிச்சாமி, நகரச் செயலர் சோ. மெய்யப்பன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலரும் சென்று வாக்கு சேகரித்தனர்.
கிராமங்களில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்
மே 07,2016,
காரைக்குடி தொகுதியிலுள்ள சாக்கோட்டை ஒன்றியக் கிராமங்களில் அதிமுக வேட்பாளர் கற்பகம் இளங்கோ வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.
கருநாவல்குடி ஊராட்சியில் தனது பிரசாரத்தைத் தொடங்கிய அதிமுக வேட்பாளர், மணிகாரன்பட்டி, அரசுவயல், ஆம்பக்குடி, ஜெயங்கொண்டான், செங்காத்தான்குடி, வலையன் வயல், ஈஞ்சவயல், சானாங்காடு உள்ளிட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த 33 கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர், தமிழக முதல்வர் பெண்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளார். தற்போது, பட்டம் பெற்ற பெண்ணின் திருமணத்துக்கு 1 பவுன் தங்கமும், ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்றும், விவசாயக் கடன், கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளார்.
இதுபோன்ற பல திட்டங்கள் மேலும் தொடரவும், இப்பகுதிக்கு தேவையான கோரிக்கைகளை நிறைவேற்றிடவும் அதிமுகவுக்கு ஆதரவளியுங்கள் எனப் பேசினார். வேட்பாளருடன், காரைக்குடி எம்.எல்.ஏ. சோழன் சித. பழனிச்சாமி, தொகுதி அதிமுக கிளைச் செயலர் கேஆர். மாசான், சாக்கோட்டை ஒன்றியத் தலைவர் சுப்பிரமணியன், துணைத் தலைவர் அடைக்கலம், ஊரவயல் எஸ்பி. ராமு மற்றும் அக்கட்சியினர் பலரும் சென்றிருந்து வாக்கு சேகரித்தனர்.
கண்ணங்குடி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
மே 06,2016,
காரைக்குடி சட்டபேரவைத் தொகுதி கண்ணங்குடி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் கற்பகம்இளங்கோ வியாழக்கிழமை வாக்குகள் சேகரித்து பிரசாரம் செய்தார்.
கண்ணங்குடி ஒன்றிய அதிமுக சார்பில் கும்மங்குடியில் பிரசாரம் தொடங்கியது. அப்போது கற்பகம் இளங்கோ பேசியது:
தமிழகத்தில் 5 ஆண்டுகள் சிறப்பான ஆட்சி நடத்திய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும். பல திட்டங்களை நிறைவேற்றி இப்பகுதியை வளர்ச்சியடையச்செய்ய அதிமுகவை ஆதரிக்க வேண்டுகிறேன். திட்டங்களை நிறைவேற்றுவதில் கால தாமதம் ஆகலாம்.
அதனை சரியாக நிறைவேற்றவதுதான் முக்கியம். இப்பகுதியில் கொண்டு வரப்பட்டுள்ள பணிகள் தொய்வின்றி நிறைவேறிட இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டுகிறேன் என்றார்.
வேட்பாளருடன் அதிமுக மாவட்டச் செயலாளர் பி.ஆர். செந்தில்நாதன் எம்.பி, காரைக்குடித் தொகுதி அதிமுக செயலாளர் கே.கே. சொர்ணலிங்கம், வழக்குரைஞர் ராமநாதன், மாவட்ட அதிமுக இளைஞரணி நிர்வாகி தேர்போகி பாண்டி, கண்ணங்குடி ஒன்றிய அதிமுக செயலாளர் பெரியசாமி உள்ளிட்டோர் உடன் சென்று வாக்குகள் சேகரித்தனர்.
தேவகோட்டை ஊராட்சிப் பகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
மே 04,2016,
காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதி தேவகோட்டை ஊராட்சிப் பகுதிகளிலுள்ள கிராமங்களில் அதிமுக வேட்பாளர் கற்பகம் இளங்கோ செவ்வாய்க்கிழமை வாக்குகள் சேகரித்துப் பிரசாரம் செய்தார்.
தேவகோட்டை ஒன்றிய அதிமுக சார்பில், குருந்தனக்கோட்டை, செலுகை, தூணுகுடி, புதுக்குறிச்சி, சிறுநல்லூர், முப்பையூர் மற்றும் கற்களத்தூர் ஊராட்சிகளில் அதிமுக வேட்பாளர் கற்பகம் இளங்கோ வாக்குகள் சேகரித்தார். முன்னதாக, காலையில் செவிழியேந்தல் கிராமத்தில் அதிமுக மாவட்டச் செயலர் பிஆர். செந்தில்நாதன் எம்.பி. பிரசாரத்தைத் தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து, பருத்தியூர், சேந்தகுடி, சிவனூர், பிடாரனேந்தல், பிரம்புவயல், இடைகுடி உள்ளிட்ட 50 கிராமங்களில் அதிமுகவினர் வாக்குகள் சேகரித்தனர். அப்போது, வேட்பாளர் கற்பகம் இளங்கோ பொதுமக்களிடையே கூறுகையில், அதிமுக அரசு கிராமப்புறங்களில் வாழும் மக்கள் நலனுக்காக பல திட்டங்களை அறிவித்து நிறைவேற்றி யிருக்கிறது. இந்தத் திட்டங்கள் தொடரவும், இந்தப் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் நடைபெறவும் அதிமுகவுக்கு ஆதரவளியுங்கள் என்றார்.
வேட்பாளருடன், தேவகோட்டை ஒன்றிய அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் சென்று வாக்குகள் சேகரித்தனர்.
காரைக்குடியில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்
மே 02,2016,
காரைக்குடி சட்டபேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கற்பகம் இளங்கோ, ஞாயிற்றுக்கிழமை சங்கராபுரம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.
காரைக்குடி அருகே சாக்கோட்டை ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சியில் பர்மா காலனி பகுதியில் வீதி வீதியாக சென்று வாக்குகள் சேகரித்தார். அப்போது, அதிமுக ஆட்சியில் பல திட்டங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றியுள்ளார். தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடரவும், மேலும் இப்பகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும், பொதுமக்கள் அதிமுகவுக்கு ஆதரவு தரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
வேட்பாளருடன், சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் பலரும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தேவகோட்டையில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
மே 01,2016,
காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தேவகோட்டை நகரில் அதிமுக வேட்பாளர் கற்பகம் இளங்கோ சனிக்கிழமை வாக்கு சேகரித்து பிரசாரம் மேற்கொண்டார்.
தேவகோட்டை நகர அதிமுக சார்பில், ராம்நகர் பகுதியில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் பிஆர். செந்தில்நாதன் பொதுமக்களிடையே பேசினார். தொடர்ந்து, வேட்பாளர் கற்பகம் இளங்கோ பேசுகையில், இப்பகுதி வளர்ச்சிக்குத் தேவையானஅனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். என்னை எளிதாக அணுகலாம். அதிமுகவுக்கு ஆதரவு தந்து வெற்றி பெறச் செய்யவேண்டும் என்றார்.
தொடர்ந்து, அய்யங்கார் பேக்கரி அருகிலும், வடக்கு சிலம்பணி (நால் ரோடு), அபிராமி கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்ட வேட்பாளருடன், காரைக்குடி தொகுதி அதிமுக செயலர் சொர்ணலிங்கம், தேவகோட்டை நகரச் செயலர் ராமச்சந்திரன், வழக்குரைஞர் ராமநாதன் உள்ளிட்ட பலரும் சென்று வாக்கு சேகரித்தனர்.
காரைக்குடி தொகுதியில் அதிமுகவுக்கு மக்கள் முன்னேற்ற கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு
ஏப்ரல் 30,2016,
காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு மக்கள் முன்னேற்ற கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மக்கள் முன்னேற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் எம். ரெத்தினம் மற்றும் நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை அதிமுக தேர்தல் அலுவலகத்துக்குச் சென்றனர். அங்கு, அதிமுக வேட்பாளர் கற்பகம் இளங்கோவை சந்தித்து, தேர்தலுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
இதில், மக்கள் முன்னேற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் சி. தமிழ்மாறன், ஒருங்கிணைப்பாளர் ஜெகன் என்ற வெற்றிதாசன், செய்தித் தொடர்பாளர் எம்.கே. பாண்டியன், சிவகங்கை மாவட்டச் செயலர் ஆர். தயாளன், ஒன்றிய நகரச் செயலர்கள் சக்திவேல், அப்துல்லா திரிசங்கு, செந்தில் நாராயணன், துரைராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
Legislative assembly election results
Assembly | Duration | Winner | Party | Votes |
Fourteenth | 2011- | Palanichamy.Cholan.Ct | AIADMK | 86104 |
Thirteenth | 2006-2011 | Sundaram.N | INC | 64013 |
Twelfth | 2001-06 | Raja. H | BJP | 54093 |
Eleventh | 1996-01 | Sundaram, N. | TMC(M) | 76888 |
Tenth | 1991-96 | Karpagam M. | ADK | 71912 |
Ninth | 1989-91 | Narayanan Rm. | DMK | 45790 |
Eighth | 1984-89 | S.P. Durairasu | ADK | 47760 |
Seventh | 1980-84 | Chidambaram, C. T. | DMK | 46541 |
Sixth | 1977-80 | P. Kaliyappan | ADK | 27403 |
Fifth | 1971-77 | C. T. Chidambaram | DMK | 39986 |
History of Sivaganga District
Sivaganga (also called Sivagangai) is a town and headquarters of the Sivaganga district in the South Indian state of Tamil Nadu. It is also the headquarters of the Sivaganga taluk. The town is located at a distance of 48 km (30 mi) from Madurai and 449 km (279 mi) from the state capital Chennai.
Sivaganga kingdome was founded by Sasivarna Periya Oodaya Thevar in 1730. The town was subsequently ruled by his successors and ultimately by Velu Nachiyar under the stewardship of Maruthu Pandiyar. They were against the British Empire, but ultimately lost to them in 1790. The Company appointed Gowry Vallaba Periya Oodaya Thevar as the Zamindar of Sivaganga in 1801, whose successors continued with chaos until India’s independence in 1947. It was under Ramnad district until 1984 and subsequently a part of the newly formed Sivaganga district. The town is known for agriculture, metal working and weaving. The region around Sivaganga has considerable mineral deposits.
Sivaganga is administered by a municipality established in 1965. As of 2011, the municipality covered an area of 6.97 km2 (2.69 sq mi) and had a population of 40,403. Sivaganga comes under the Sivaganga assembly constituency which elects a member to the Tamil Nadu Legislative Assembly once every five years and it is a part of the Sivaganga constituency which elects its Member of Parliament (MP) once in five years. Roadways are the major mode of transportation to the town and it also has rail connectivity. The nearest seaport, Thoothukudi Port, is located 189 km (117 mi) from Sivaganga, while the nearest airport, Madurai International Airport, is located 53 km (33 mi) from the town.
Sivaganga Area:
Area Sq. Km: 4,233
Sivaganga Population:
Male: 668,672
Female: 670,429
Total: 1,339,101
Literacy Rates
Male: 87.92%
Female: 71.85%
Total: 79.85%