Thiruppathur

Tirupattur  is a state assembly constituency in Tamil Nadu. Elections and winners in the constituency are listed below. Elections were not held in year 1957 and 1962.

Total Voters:

Male: 1,31,982
Female: 1,33,930
Transgender: 3
Total: 2,65,915

 

கோட்டையூர், சாக்கோட்டை ஒன்றியங்களில் திருப்பத்தூர் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மே 12,2016,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கோட்டையூர், சாக்கோட்டை ஓன்றியங்களில் புதன்கிழமை அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.அசோகன் வாக்கு சேகரித்தார்.

 ஓ.சிறுவயலில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய கே.ஆர்.அசோகன் 31 கிராமங்களில் மக்களை சந்தித்து வாக்குச் சேகரித்தார். முன்னதாக ஓ.சிறுவயலில் கிராம மக்கள் வரவேற்பு அளித்தனர். அவருடன் சிவகங்கை மக்களவை அதிமுக உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன் உள்ளிட்ட அதிமுகவினர் சென்றனர். பிரசாரத்தில் செந்தில்நாதன் பேசுகையல், விவசாய குடும்பத்திலிருந்து வந்திருக்கும் அசோகனை சட்டப்பேரவைக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். தொடர்ந்து வேட்பாளர் அசோகன், தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்களை எடுத்துக் கூறி, தற்போது அறிவித்துள்ள நலத்திட்ட சலுகைகள் உங்களை வந்தடைய இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.  மேலும் பாரிநகர், செந்தமிழ்நகர், கரியபட்டி, மருதங்குடி, வடகுடி, மணச்சை, திருவேலங்குடி, நேமம், பலவான்குடி உள்ளிட்ட 31 கிராமங்களில் பிரசாரம் செய்தனர். அதிமுக நிர்வாகிகளான ஊராட்சி செயலர் ஆறுமுகம், ஓ.சிறுவயல் ஊராட்சிமன்றத் தலைவர் அழகப்பன், சாக்கோட்டை ஓன்றியச் செயலாளர் சுப்பிரமணியன், கோட்டையூர் நகரச் செயலாளர் பாலசுப்பிரமணியன், ஜெயலலிதா பேரவைச் செயலர் புனிதபாஸ்கர் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

திருப்பத்தூர் தொகுதி அ.தி.மு.க.வினர் குழு அமைத்து தீவிர வாக்கு சேகரிப்பு

மே 10,2016,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் அதிமுகவினர் குழு அமைத்து அனைத்து வாக்காளர்களையும் சந்தித்து வாக்கு சேகரிக்கின்றனர்.

  திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் கே.ஆர்.அசோகனை ஆதரித்து அக்கட்சியினர் நூறு சதவீத வாக்காளர்களை சந்திக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  நகர் பகுதியில் பேரூராட்சி வார்டு அதிமுக நிர்வாகிகள் குழு அமைக்கப்பட்டு இப்பணியினை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஊராட்சிப் பகுதிகளிலும் ஊராட்சி கிளைச் செயலாளர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு வாக்காளர்களை சந்தித்து அரசின் சாதனைகள், அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள

சலுகைகள் ஆகியவற்றை எடுத்துக் கூறி இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர். திங்கள்கிழமை எம்.புதூர் ஊராட்சியில் ஊராட்சிக் கழகச் செயலர் முருகானந்தம், முன்னாள் ஓன்றியச் செயலாளர் கு.ம.காந்தி, மற்றும் ராமசின்னையா, அழ.சேது,ஆறுமுகம்,, மகளிரணி நிர்வாகிகள் ஆனந்தி,  பாக்கியம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இப்பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் பேருந்து நிலையம் விரிவாக்கப்படும்: அதிமுக வேட்பாளர் உறுதி

மே 9,2016,

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் என, அதிமுக வேட்பாளர் கே.ஆர். அசோகன் உறுதியளித்துள்ளார்.

திருப்பத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர். அசோகன், ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு தம்பிபட்டியில் பிரசாரத்தை தொடங்கினார். பின்னர், அகிழ்மனைத் தெரு, தென்மாநகர், பள்ளிவாசல், சமஸ்கான்பள்ளிவாசல் தெரு, கல்வெட்டுமேடு, மருத்துவர் காலனி, புதுத்தெரு, அக்னிபஜார், புதுப்பட்டி, காந்திசிலை, நான்குரோடு, உள்ளிட்ட 18 வார்டுகளிலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பொதுமக்களிடையே பேசியது: திருப்பத்தூர் பேருந்து நிலையத்தின் வழியாக 24 மணி நேரமும் போக்குவரத்து உள்ளது. ஆனால், பேருந்து நிலையத்தின் பரப்பளவு மிகவும் குறைவு என்பதால், அடிக்கடி நெரிசல் ஏற்படுகிறது. அதிமுக அரசு அமைந்தவுடன், திருப்பத்தூர் பேருந்து நிலையம் விரிவுபடுத்தப்படும்.

திருப்பத்தூரில் உள்ள குடிநீர் பிரச்னைக்கும் நிரந்தரத் தீர்வு காணப்படும். எனவே, திருப்பத்தூர் நகரை மேம்படுத்த அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

 இதில், முன்னாள் எம்.எல்.ஏ. கே.கே. உமாதேவன், ஒன்றியச் செயலர் ராமலிங்கம், நகரச் செயலர் இப்ராம்ஷா, பேரூராட்சி மன்றத் தலைவர் சோமசுந்தரம், ஓன்றிய துணைத் தலைவர் பத்மநாபன், ஓன்றிய துணைச் செயலர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தனர்.

சிங்கம்புணரி ஒன்றியப் பகுதிகளில் அதிமுக வேட்பாளருக்கு வரவேற்பு

மே 08,2016,

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியிலுள்ள சிங்கம்புணரி ஓன்றியத்தில், அதிமுக வேட்பாளர் கே.ஆர். அசோகன் சனிக்கிழமை வாக்கு சேகரித்தபோது, பொதுமக்கள் அவருக்கு வரவேற்பளித்தனர்.

சிங்கம்புணரி ஓன்றியத்திலுள்ள கோட்டபட்டி என்ற கிராமத்தில், காலை 9 மணிக்கு தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய கே.ஆர். அசோகன், செவல்பட்டி, வணங்காமுடிபட்டி, சித்தப்பட்டி, வேட்டங்குடிபட்டி, கொள்ளுகுடிபட்டி, அய்யாபட்டி, முறையூர், சூரக்குடி, பள்ளம்பட்டி, எழுவன்பட்டி, அ.காளாப்பூர், அரசிளம்பட்டி, மணப்பட்டி, சிவபுரிபட்டி, மட்டிகரைப்பட்டி உள்ளிட்ட 56 கிராமங்களில் பொதுமக்களைச் சந்தித்து, அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி வாக்கு சேகரித்தார்.

அப்போது, அப்பகுதியில் உள்ள கிராமத்தினர் அவரை வரவேற்று ஆரத்தி எடுத்தனர். வாக்கு சேகரிப்பின்போது, ஒன்றியச் செயலர் வாசு, தொகுதி பொறுப்பாளர் வெங்கடேஷ், தொகுதி இணைச் செயலர் ஜெயராமன், முன்னாள் ஓன்றியக் குழு தலைவர் பொன்னழகு ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் புஷ்பலீலா கிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர்கள், முன்னாள் ஓன்றியச் செயலர்கள் என ஏராளமானோர் வேட்பாளருடன் சென்றிருந்தனர்.

சிங்கம்புணரியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மே 07,2016,

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் வெள்ளிக்கிழமை அதிமுக வேட்பாளர் கே.ஆர். அசோகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சிங்கம்புணரி நகர் பகுதியில் உள்ள அண்ணா சிலை மற்றும் காமராஜர் சிலைக்கு மாலையணிவித்து, பேருந்து நிலையம் முன்பு தனது பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து, உப்புச் செட்டியார் தெரு, நியு காலனி, சந்திவீரன்புரம், பாரதி நகர், கூத்தாயி அம்மன் கோயில் தெரு, வேட்டையன்பட்டி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்த வேட்பாளரை, ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

வேட்பாளருடன், மக்களவைத் தொகுதி உறுப்பினர் செந்தில்நாதன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.கே. உமாதேவன், ஒன்றியச் செயலர் வாசு, நகரச் செயலர் ராஜசேகரன், திருவாசகம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

 

கல்லல், திருப்பத்தூர் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மே 05,2016,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் கல்லல் ஓன்றியங்களில் திருப்பத்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர். அசோகன் புதன்கிழமை வாக்குச் சேகரித்தார்.

திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கல்லல் ஒன்றியம் பாதரக்குடி, தட்டட்டி, கொரட்டி, குன்றக்குடி, மருதங்குடி, சிராவயல்புதூர், நாச்சியாபுரம், கூத்தகுடி, வெளியாத்தூர், மற்றும் திருப்பத்தூர் ஒன்றியத்திற்குள்பட்ட அழகாபுரி, அதிகரம், கிளாமடம், தென்கரை, அரிபுரம், ஆத்தங்குடி, சின்னக்குன்றக்குடி, ஆற்காடு, அரண்மனைப்பட்டி, தம்பிபுரம், ஆலத்துப்பட்டி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வேட்பாளர் கே.ஆர்.அசோகன் சென்று வாக்குகள் சேகரித்தார். வாக்குச் சேகரிப்பின் போது முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.கே.உமாதேவன், தொகுதி பொறுப்பாளர் வெங்கடேசன், கரு.சிதம்பரம், கல்லல் ஒன்றியச் செயலாளர் குணசேகரன், கல்லல் ஒன்றிய இளைஞரணி சுப்பிரமணியன் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

திருப்பத்தூர் ஒன்றியப் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

மே 04,2016,

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியத்திலுள்ள நெடுமறம், இளையாத்தங்குடி பகுதிகளில் அதிமுக வேட்பாளர் கே.ஆர். அசோகன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தார்.

திருப்பத்தூர் தொகுதிக்குள்பட்ட நெடுமறம், இளையாத்தங்குடி, கீரணிப்பட்டி, ஆவணிப்பட்டி, வடக்கு இளையாத்தங்குடி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்ளில் வேட்பாளர் கே.ஆர். அசோகன் வாக்கு சேகரித்தார்.  அப்போது, அவர் பொது மக்களிடையே, நல்லாட்சி தொடரவும், மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து உங்களை வந்து சேரவும் அதிமுகவுக்கு ஆதரவளியுங்கள் என்றார்.

   வாக்கு சேகரிப்பின்போது, ஒன்றியச் செயலர் ராமலிங்கம், முன்னாள் ஒன்றியச் செயலர்கள் ஏ.வி. நாகராஜன், துவார்மூர்த்தி, ஓன்றியத் துணைச் செயலர் முருகேசன், ஒன்றியக் கவுன்சிலர்கள் ரேணுகா கண்ணதாசன், தேன்மொழிராஜா என அக்கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

திருப்பத்தூரில் அ.தி.மு.க.வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மே 03,2016,

திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.அசோகன் நகரின் முக்கிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். திருப்பத்தூர் நகர் பகுதியில் உள்ள அகமுடையார் மடத்தில் முக்கிய பிரமுகர்களைச் சந்தித்த  கே.ஆர்.அசோகன், அ.தி.மு.க. ஆட்சியில் பல திட்டங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றியுள்ளதாகவும், இப்பகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள தனக்கு ஆதரவு தரவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

 

திருப்பத்தூர் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் குண்டுக் கல்யாணம் பிரசாரம்

மே 02,2016,

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர், மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, சனிக்கிழமை நடிகர் குண்டுக் கல்யாணம் பிரசாரம் செய்தார்.

திருப்பத்தூரில் அண்ணா சிலை அருகே நடைபெற்ற இப்பிரசாரக் கூட்டத்தில் நடிகர் குண்டு கல்யாணம் பேசியதாவது: இத்தேர்தலில் ஜெயலலிதா தலையில் 234 தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெறும். மீண்டும் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமையும்.

 மாணவ, மாணவியரின் கல்விக்கான பல்வேறு நலத் திட்டங்கள், பேருந்து நிலையம்தோறும் தாயப்பால் ஊட்டும் அறை அமைத்தது, முதியோர்களுக்கு இலவச பேருந்து பயணம் போன்ற எண்ணற்ற திட்டங்களால் மக்கள் ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்கத் திட்டமிட்டுள்ளனர். எனவே, அதிமுகவுக்கு ஆதரவளித்து, உங்கள் தொகுதி வேட்பாளரை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தில், ஒன்றியச் செயலர் ராமலிங்கம், நகரச் செயலர் இப்ராம்ஷா, பேரூராட்சி மன்றத் தலைவர் சோமசுந்தரம், புதுத்தெரு முருகேசன், பேரூராட்சி கவுன்சிலர்கள், கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Periyakaruppan.Kr DMK 83485
Thirteenth 2006-2011 Periyakaruppan.K.R DMK 48128
Twelfth 2001-06 Umadhevan. Kk ADMK 50165
Eleventh 1996-01 R. Sivaraman DMK 58925
Tenth 1991-96 S. Kannappan ADK 63297
Ninth 1989-91 Thennarasu S.S. DMK 33639
Eighth 1984-89 Madhavan, S. ADK 51581
Seventh 1980-84 Valmigi, V. INC(I) 34342
Sixth 1977-80 S. Shanmugam Koothagudi CPI 21579
Fifth 1971-77 S. Madhavan DMK 54117

History of Sivaganga District

Nataraja-Temple

Sivaganga (also called Sivagangai) is a town and headquarters of the Sivaganga district in the South Indian state of Tamil Nadu. It is also the headquarters of the Sivaganga taluk. The town is located at a distance of 48 km (30 mi) from Madurai and 449 km (279 mi) from the state capital Chennai.

Sivaganga kingdome was founded by Sasivarna Periya Oodaya Thevar in 1730. The town was subsequently ruled by his successors and ultimately by Velu Nachiyar under the stewardship of Maruthu Pandiyar. They were against the British Empire, but ultimately lost to them in 1790. The Company appointed Gowry Vallaba Periya Oodaya Thevar as the Zamindar of Sivaganga in 1801, whose successors continued with chaos until India’s independence in 1947. It was under Ramnad district until 1984 and subsequently a part of the newly formed Sivaganga district. The town is known for agriculture, metal working and weaving. The region around Sivaganga has considerable mineral deposits.

Sivaganga is administered by a municipality established in 1965. As of 2011, the municipality covered an area of 6.97 km2 (2.69 sq mi) and had a population of 40,403. Sivaganga comes under the Sivaganga assembly constituency which elects a member to the Tamil Nadu Legislative Assembly once every five years and it is a part of the Sivaganga constituency which elects its Member of Parliament (MP) once in five years. Roadways are the major mode of transportation to the town and it also has rail connectivity. The nearest seaport, Thoothukudi Port, is located 189 km (117 mi) from Sivaganga, while the nearest airport, Madurai International Airport, is located 53 km (33 mi) from the town.

 

Sivaganga District Map

Sivaganga Area:

Area Sq. Km: 4,233

Sivaganga Population:

Male: 668,672
Female: 670,429
Total: 1,339,101

Literacy Rates

Male: 87.92%
Female: 71.85%
Total: 79.85%