Tiruchirappalli (West) (State Assembly Constituency)
Tiruchirappalli – II (State Assembly Constituency) has been renamed as Tiruchirappalli West after the constituency delimitaions 2008. Tiruchirappalli West will be one of 17 assembly constituencies to have VVPAT facility with EVMs in Tamil Nadu Legislative Assembly election, 2016
Total Voters:
Male | 1,19,474 |
Female: | 1,25,457 |
Transgender | 4 |
Total | 2,44,935 |
AIADMKCandidate for Tiruchirappalli Assembly Election 2016 – Mrs. S.Tamilarasi
அதிமுக வேட்பாளர் மனோகரனை ஆதரித்து நடிகர் செந்தில் பேச்சு
மே 09,2016,
திருச்சி மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் உறையூர் பாண்டமங்கலம், பீமநகர் கூனிபஜார், கருமண்டபம் ஆகிய பகுதிகளில் அதிமுக வேட்பாளர் மனோகரனை ஆதரித்து அவர் மேலும் பேசியது:
தமிழகத்தில் கடந்த ஆட்சியில் திமுகவினர் அறிவித்த திட்டங்களில் பலவற்றைச் செயல்படுத்தவில்லை. ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தவைவை மட்டுமன்றி அறிவிக்காத திட்டங்களையும் செயல்படுத்தினார். குறிப்பாக திமுக ஆட்சியில் தினசரி 10 மணி நேர மின்வெட்டால் மக்கள் அவதிக்குள்ளாயினர். ஆனால் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் மின்வெட்டு போன இடம் தெரியவில்லை. மின் தட்டுப்பாட்டை முற்றிலும் போக்கியவர் முதல்வர் ஜெயலலிதா.
எனவே மீண்டும் ஜெயலலிதாவை முதல்வராக்க, திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மனோகரன் வெற்றிபெறும் வகையில் வாக்களிக்க வேண்டும். அதேபோல அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார். நிகழ்ச்சியின்போது அந்தந்த பகுதிச் செயலாளர்கள் மற்றும் கோட்டத் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதிமுக ஆட்சி திட்டங்களால் பயன்பெறாத குடும்பங்களே தமிழகத்தில் இல்லை
மே 08,2016,
தமிழகத்தில அதிமுக ஆட்சி திட்டங்களால் பயன்பெறாத குடும்பங்களே இல்லை என்றார் மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.மனோகரன்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூர், செங்குறிச்சி, மணல்மேடு, ரெட்டைமலை, குட்டிமலை, தில்லைநகர் 1 முதல் 11 வது குறுக்குச்சாலை, விரிவாக்கப் பகுதிகளி்ல் சனிக்கிழமை முதல் மாலை வரை வாக்குசேகரித்து, மேலும் அவர் பேசியது:
மக்களால் நான் மக்களுக்காக நான் என்ற உயர்ந்தலட்சியத்துடன் தமிழகத்தில் ஆட்சி நடத்தி வருபவர் முதல்வர் ஜெயலலிதா. 2011 பேரவைத் தேர்தலின் போது அறிவித்த போது அனைத்து அறிவிப்புகளையும் நிறைவேற்றித் தந்தவர். அதுமட்டுமல்லாமல் ஏழைகளின் பசியைப் போக்க அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா சிமென்ட், அம்மா குடிநீர் என மக்கள் நலன் காக்கும் திட்டங்களையும் அறிவித்து அதை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வந்தவர் முதல்வர் ஜெயலலிதா.
திருச்சி மாநகரில் ஜங்ஷன் பகுதியில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலத்தின் ஒருபகுதியை திறந்து மக்களின் பயன்பாட்டுக்கு விட்டது, உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையோரத்தில் தடுப்புச்சுவர் அமைத்தல் போன்ற மக்கள் நலன் காக்கும் பணி அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டது.
எனவே மக்கள்நலன் காக்கும் அதிமுக அரசை தொடர்ந்து மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றார் அவர்.பிரசாரத்தின் போது சட்டப்பேரவை உறுப்பினர் மு. பரஞ்சோதி, கோட்டத் தலைவர் ஞானசேகரன் உள்ளிட்ட கட்சியினர் உடனிருந்தனர்.
கிராப்பட்டி, கே.கே.நகர்ப் பகுதிகளில் மனோகரன் தீவிர வாக்குசேகரிப்பு
மே 01,2016,
திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆர். மனோகரன் கிராப்பட்டி, கே.கே.நகர் பகுதிகளில் சனிக்கிழமை தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
திருச்சி கிராப்பட்டியில் சனிக்கிழமை காலை பிரசாரத்தைத் தொடங்கிய அதிமுக வேட்பாளர் ஆர். மனோகரன், தொடர்ந்து பிள்ளையார்க்கோயில் தெரு,விறகுபேட்டைத் தெரு, அன்புநகர், கே.கே.நகர், காஜாமலை காலனி, காளியம்மன் கோயில்தெரு, அரசு குடியிருப்புப் பகுதிகள், மங்கம்மா சாலை, எல்.ஐ.சி.காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்றும், வணிக நிறுவனங்கள், தேநீரகங்கள், சாலையோரக் கடைகள் என பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அதிமுக அரசின் சாதனைகள் தொடர அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வாக்கு சேகரித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிகள் மட்டுமல்லாது, சொல்லாத பல திட்டங்களையும் நிறைவேற்றி, தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வருகிறார். அவரின் சாதனைகளை மக்களுக்கு தொடர்ந்து கிடைக்க தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்து வாக்குசேகரித்தார் அதிமுக வேட்பாளர் மனோகரன். பிரசாரத்தில் அதிமுகவின் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோகரனை ஆதரித்து நிர்மலா பெரியசாமி பிரசாரம்
ஏப்ரல் 27, 2016,
திருச்சி மேற்கு, கிழக்கு மற்றும் திருவெறும்பூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்கு சேகரிப்பு
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் அரசு தலைமை கொறடா மனோகரன், கிழக்கு தொகுதியில் வெல்லமண்டி நடராஜன், திருவெறும்பூர் தொகுதியில் கலைச்செல்வன் ஆகியோர் அ.தி.மு.க. வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இதையொட்டி அவர்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்களை ஆதரித்து கட்சி நிர்வாகிகளும், தலைமை கழக பேச்சாளர்களும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோகரனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை கழக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி உறையூர் குறத்தெரு, பீமநகர் பகுதியில் திறந்த ஜீப்பில் நின்றபடி பிரசாரம் செய்தார். அப்போது அவர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பேசினார். வேட்பாளர் மனோகரன், குமார் எம்.பி., பரஞ்ஜோதி எம்.எல்.ஏ., மேயர் ஜெயா ஆகியோர் உடன் இருந்தனர்.
திருச்சி மேற்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
ஏப்ரல் 21, 2016,
அ.தி.மு.க. சார்பில் திருச்சி மேற்கு தொகுதியில் திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், தமிழக அரசின் தலைமை கொறடாவுமான மனோகரனும், ஸ்ரீரங்கத்தில் வளர்மதி எம்.எல்.ஏ., ஆகியோர் போட்டியிடுகின்றனர். பொதுமக்களிடம் வாக்கு கேட்டு அ.தி.மு.க. வேட்பாளர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வாகனம் மூலம் பிரசாரம் மேற்கொள்வதை நேற்று தொடங்கினர். திருச்சி மேற்கு தொகுதியில் உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் வேட்பாளர் மனோகரன் சாமி தரிசனம் செய்த பின் கோவில் முன்பு திறந்த ஜீப்பில் நின்றபடி பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். சிறிது தூரம் சென்ற பின் உறையூர் பகுதியில் வீதி, வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவருடன் குமார் எம்.பி., பரஞ்சோதி எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். இதேபோல ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி ரெங்கநாதர் கோபுரம் முன்பு இருந்து வாகன பிரசாரத்தை தொடங்கினார்.
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜீயரிடம் ஆசி பெற்றார்
திங்கள் , ஏப்ரல் 11,2016,
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக மனோகரன், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக தமிழரசி, ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக வளர்மதி ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம் தொகுதி தேர்தல் அலுவலகங்களை திறந்து தேர்தல் பணிகளை தொடங்கினார்கள். முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டும் பணியையும் உடனடியாக தொடங்கினார்கள். இந்நிலையில் மனோகரன் உள்பட 3 வேட்பாளர்களும் நேற்று காலை ஸ்ரீரங்கம் ஜீயர் மடத்திற்கு சென்று நாராயண ஜீயரிடம் ஆசி பெற்றார்கள்.
இதே போல் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் ஆர். விசுவநாதன் ஏற்கனவே முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி இருந்தார். இந்நிலையில் அ.தி.மு.க. சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் மனோகரன், தமிழரசி, வளர்மதி ஆகியோர் நேற்று ஆர். விசுவநாதனை சந்தித்து பேசி தங்களுக்கு ஆதரவு வழங்கும்படி கேட்டுக்கொண்டனர்.
திருச்சி மேற்கு தொகுதி அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறப்பு வேட்பாளர் பிரசாரம் தொடக்கம்
ஞாயிறு, ஏப்ரல் 10,2016,
திருச்சி கிழக்கு, மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் தொகுதிக்கான அ.தி.மு.க. தேர்தல் அலுவலகங்கள் திறக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து வேட்பாளர்கள் பிரசாரத்தை தொடங்கினர்.
அ.தி.மு.க. தேர்தல் அலுவலகங்கள்
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (மே) 16-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் தலைமையில் 5 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் அலுவலகங்களை திறந்து, வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா உத்தரவிட்டார்.
அதன்படி, திருச்சி தில்லைநகர் 11-வது குறுக்குதெருவில் அமைக்கப்பட்டு இருந்த மேற்கு தொகுதிக்கான தேர்தல் அலுவலகத்தை அரசு கொறடாவும், வேட்பாளருமான மனோகரன் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். பின்னர் அவர் அந்த பகுதியில் பிரசாரத்தை தொடங்கினார். அவருடன் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பெண்கள் திரளாக சென்று வாக்கு சேகரித்தனர்.
Legislative assembly election results
Assembly | Duration | Winner | Party | Votes |
Fourteenth | 2011- | Paranjothi M. | AIADMK | 69029 |
2011 | N.Mariam Pitchai | AIADMK | 77492 |
History of Tiruchirappalli District
Woraiyur , a part of present day Tiruchirappalli, was the capital city of Cholas from 300 B.C. onwards. This is supported by archaeological evidences and ancient literatures. There are also literary sources which tell that Woraiyur continued to be under the control of Cholas even during the days of Kalabhra interregnum (A.D. 300 – 575).
Later, Woraiyur along with the present day Tiruchirappalli and its neighboring areas came under the control of Mahendra Varma Pallava I, who ascended the throne in A.D. 590. Till A.D. 880, according to the inscriptions, this region was under the hegemony of either the Pallavas or the Pandyas. It was in A.D. 880, Aditya Chola brought a downfall to the Pallava dynasty. From that time onwards Tiruchirappalli and its region became a part of Greater Cholas. In A.D. 1225 the area was occupied by the Hoysulas. Afterwards, it came under the rule of later Pandyas till the advent of Mughal Rule.
Tiruchirappalli was for some time under the Mughal rule, which was put to an end by the Vijayanagar rulers. The Nayaks, the Governors of Vijayanagar Empire, ruled this area till A.D. 1736. It was Viswanatha Nayaka who built the present day Teppakulam and the Fort. The Nayak dynasty came to an end during the days of Meenakshi.
The Muslims rules this region again with the aid of either the French or the English armies. For some years, Tiruchirappalli was under the rule of Chanda Sahib and Mohamed Ali. Finally the English brought Tiruchirappalli and other areas under their control. Soon after the area was ceded to East India Company as per the agreement at the eve of the Kanatic war, Tiruchirappalli district was formed under the Collectorship of Mr. John (Junior) Wallace in 1801. The district was then under the hegemony of British for about 150 years till the independence of India.
Tiruchirappalli Area:
Area Sq. Km: | 4,509 |
Tiruchirappalli Population:
Male: | 1,352,284 |
Female: | 1,370,006 |
Total: | 2,722,290 |
Literacy Rates
Male: | 89.72% |
Female: | 76.87% |
Total: | 83.23% |